இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) விளங்கி வருகிறது. இந்நிறுவனம், உலகளவில் 46 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி, இந்திய ஐடி துறையின் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் தான், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐரோப்பிய மென்பொருள் நிறுவனமான நியூஜென் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் உடன் 5 ஆண்டுகளுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நியூஜென் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதன் இங்கிலாந்து துணை நிறுவனம், டிசிஎஸ் பெல்ஜியமுடன் 4.22 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிளவுட் ஹோஸ்டிங், மென்பொருள் உரிமங்கள் மற்றும் அமலாக்க சேவைகள் ஆகியவை அடங்கும். இந்த ஒப்பந்தம் மூலம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்காக டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு நவீன கிளவுட் அடிப்படையிலான எண்டர்பிரைஸ் ரெக்கார்ட்ஸ் மேனேஜ்மெண்ட் தளத்தை நியூஜென் வழங்கும். மேலும், இந்த ஒப்பந்தம் வணிகரீதியானது என்றும், விதிகளுக்கு முரணானது இல்லை என்றும் நியூஜென் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் டிசிஎஸ் போன்ற சர்வதேச ஐடி நிறுவனங்களுடன் ஆழமான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான நியூஜெனின் உத்தியை அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹெச்-1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் விதித்திருப்பது, டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை ஏற்றுமதியாளரான டிசிஎஸ், ஹெச்-1பி விசா திட்டத்தின் இரண்டாவது பெரிய பயனாளியாக உள்ளது.
இந்த விசாக்களுக்கான புதிய கட்டணங்கள் டிசிஎஸ்-க்கு மேலும் நிதி சுமையை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் உள்ள ஹெச்-1பி விசா சிக்கல்களுக்கு மத்தியில், டிசிஎஸ் தனது வணிக உத்தியை மாற்றியமைத்து வருகிறது.
சமீபத்தில், அமெரிக்க சிப்செய்தி நிறுவனமான என்விடியாவுடன் ஒரு முக்கிய கூட்டாண்மையை அறிவித்தது. இந்த ஒப்பந்தம் மூலம், சில்லறை வர்த்தகர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்த, என்விடியாவின் கணினி திறன்களை பயன்படுத்த உள்ளது.
மேலும், மற்றொரு அமெரிக்க சிப்செய்தி நிறுவனமான குவால்காமுடன் இணைந்து, பெங்களூருவில் ஒரு புதிய கண்டுபிடிப்பு ஆய்வகத்தை டிசிஎஸ் அமைக்க உள்ளது. இந்த புதிய ஆய்வகம், 5ஜி தனியார் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் பிற உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய வணிக முயற்சிகள், டிசிஎஸ் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications