இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஏற்கனவே புதிய வர்த்தகங்கள் கிடைக்காமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், பல உயர் அதிகாரிகள் போட்டி நிறுவனத்தில் உயர் பதவிகளிலும், உயர் பொறுப்புகளிலும், அதிகச் சம்பளத்துடன் சேர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களும் காக்னிசென்ட் நிறுவனம் தங்களுடைய நிறுவன ஊழியர்களை டார்கெட் செய்து ஈர்த்து வருவதாக விமர்சனம் செய்தது. இதைத் தொடர்ந்து காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்த ஊழியர்கள் மீது ஒப்பந்தத்தை மீறி இணைந்துள்ளதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறிய பிரச்சனை தற்போது டிசிஎஸ் நிறுவனத்திலும் வெடித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசிஸ் நிறுவனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் பார்ட்னர் எகோசிஸ்டம்ஸ் & கூட்டணிகள் பிரிவின் உலகளாவிய தலைவரான தீனாநாத் கோல்கர் தனது பதவி மற்றும் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் 34 ஆண்டுக்கால நீண்ட பணிக்காலத்திற்குப் பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறினார் தீனாநாத் கோல்கர். இவர் 1996 இல் TCS இல் டேட்டா வேர்ஹவுசிங் மற்றும் டேட்டா மைனிங் குழுவைத் தொடங்கினார். இந்தக் குழு தான் பின்னாளில் business intelligence நடைமுறையாக மாறியது.
தீனாநாத் கோல்கர் அவர் TCS eServe நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார், இதைத் தொடர்ந்து BFSI BPO இன் தலைவராகவும் பதவிகளில் பணியாற்றினார். அவர் 2017-22 காலகட்டத்தில் அனலிட்டிங்க்ஸ் மற்றும் இன்டலிஜென்ஸ் பிரிவின் உலகளாவிய தலைவராகவும் உயர்ந்தார்.
34 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தீனாநாத் கோல்கர் தனது லிங்க்ட்இன் பதிவில் உருவாக்கமான பல ஆண்டுகளாக TCSல் சிறந்த தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் பணியாற்றியும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. நான் பணிபுரிந்த ஒவ்வொரு குழுவும் சிறப்பானது, இந்த 34 வருட பணியில் பல சிறந்த நினைவுகள் உள்ளது எனத் தெரிவித்தார்.
தீனாநாத் கோல்கர் பதவியில் ராஜீவ் ராய் என்பவர் பார்ட்னர் எகோசிஸ்டம்ஸ் & கூட்டணிகள் பிரிவின் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications