இந்தியாவில் ஐடி வேலை என்றாலே டிசிஎஸ் நிறுவனம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12,000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சி அடைய வைத்தது. முன் அறிவிப்பில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றனர், திடீரென அழைத்து வேலை இல்லை என்கின்றனர், பலரை கட்டாய ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என பல்வேறு ஐடி ஊழியர்களும் டிசிஎஸ் மீது சமூக வலைத்தளங்களில் புகார் கூறினர்.

எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை ஆணையங்களிடம் தொடர்ச்சியாக புகார்களும் முன் வைக்கப்பட்ட வண்ணம் இருந்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய தலைவலி உருவாகி இருக்கிறது. அதாவது நிறுவனத்தில் மூத்த நிலை ஊழியர்கள் பலரும் திடீரென ராஜினாமா செய்கிறார்களாம். மொத்தமுள்ள 1800 சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஊழியர்களில் கடந்த 8 மாதங்களில் 300 பேர் திடீரென வேலையில் இருந்து நின்றுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்தது ஊழியர்களின் இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. வைஸ் பிரசிடெண்ட், பிரின்சிபல் கன்சல்டண்ட், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் என பல ஆண்டுகளாக நிறுவனத்தோடு நெருக்கமாக வேலை செய்த பலரும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதுவும் மூத்த ஊழியர்கள் மத்தியில் அச்ச உணர்வையும் பணிபாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியதாக மிண்ட் செய்தி கூறுகிறது. நீண்ட கால வேலை, நல்ல சம்பளம் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் என்ற சூழலில் வேலை செய்ய வேண்டாம் என பலரும் தாங்களாகவே வெளியேறுவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் இப்படி முக்கிய பதவிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் திடீரென வெளியேறுவது நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் டிசிஎஸ் வேலை என்றாலே லைஃப் செட்டில் என்ற சூழல் இருந்தது. ஆனால் ஏஐ வருகை அந்த நிலையை மாற்றிவிட்டது. மெயில் வந்துவிட்டால் யாராக இருந்தாலும் நிறுவனத்தை விட்டு வெளியேறி தான் ஆக வேண்டும்.
டிசிஎஸ் மட்டுமல்ல இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்கள் பலவற்றிலும் இது தான் நிலைமை. ஏஐ வருகையால் வேலை சுலமடைந்ததால் நிறுவனங்களும் மல்டி லெவல் மேனேஜ்மெண்ட் என்ற கட்டமைப்பை குறைக்கிறதாம், இதனால் மூத்த ஊழியர்கள் வேலையை விட்டாலும் அதற்கேற்ப மறுகட்டமைப்பு செய்து கொள்கிறார்களாம்.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications

