40,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. மாணவர்கள் ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!

இந்தியாவின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 5,452 பேரையும் 2-ஆம் காலாண்டில் 5,726 பேரையும் வேலைக்கு எடுத்துள்ளது. கடந்த காலாண்டின் தொடர்ச்சியாக இந்த முறையும் பணியமர்த்தலைத் தொடர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த ஊழியர் எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, TCS நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 612,724-ஐ தொட்டது. இது முந்தைய காலாண்டில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். அதேபோல 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 11,000 புதிய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியது.

 40,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. மாணவர்கள் ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!

டிசிஎஸ் நிறுவனத்தின் HR ஆபிஸர் மிலிந்த் லக்காட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு திட்டமிடல் குறித்து தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார். புதிய ஊழியர்களை சேர்ப்பதற்கான பாதையில் இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டிற்கான பணியமர்த்தல் செயல்முறையை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மார்ச் 2025-ஆம் ஆண்டில் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் 40,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2026-ஆம் நிதியாண்டுக்கான கேம்பஸ் செயல்முறையை தொடங்கிவிட்டோம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஒப்படைக்கும் சிக்கலான தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் எங்களை தயார்படுத்தி வருகிறோம் என்று லக்காட் கூறியுள்ளார்.

2024 ஆம் நிதியாண்டில் கடந்த 19 ஆண்டுகளில் முதல்முறையாக டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 13,249 ஊழியர்களை குறைத்தது. இதனால் அந்த குறிப்பிட்ட வருடத்தின் முதல் காலாண்டில் ஊழியர் குறைப்பு விகிதம் 12.3 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் கடந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த விகிதம் 14.9 சதவீதமாக உயர்ந்தது.

நிதி செயல்திறனைப் பொறுத்தவரை, TCS இரண்டாம் காலாண்டில் ரூ.11,909 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பாகும். இருப்பினும், இது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பை விட குறைவாக உள்ளது. அதேபோல இந்தக் காலாண்டின் வருவாய் ரூ.64,259 கோடியாக 7.6% அதிகரித்துள்ளது.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அதிகரிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வரும் நிலையில், டிசிஎஸ் தொடர்ந்து பணியமர்த்தலை செய்து வருவது பல மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+