இந்திய தொழில் துறையின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான வினீத் நாயர் அவர்கள் வியாழக்கிழமை அன்று 85 வயதில் காலமானார். அவரது நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் என உலகெங்கிலும் உள்ளவர்கள் வினீத் நாயர் குறித்து இரங்கல் பதிவை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது பணி வாழ்க்கையில், இந்திய அரசு, சர்வதேச பன்னாட்டு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில், பல நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

உலக வங்கியில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய அவர், இந்திய அரசின் கீழ் இயங்கும் "கேஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா" GAIL நிறுவனத்தை நிறுவி, அதன் நிர்வாக இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவராக இருந்த போது தான் இவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.
வினீத் நாயரின் மறைவு செய்தியை அறிந்த அவரது நண்பரும், முன்னாள் டெக் மஹிந்திரா நிர்வாக இயக்குநருமான சி.பி. குர்னானி டிவிட்டரில் மனம் திறந்து பதிவிட்டு உள்ளார். "வினீத் நாயரின் மறைவு செய்தியை அறிந்து எனது இதயம் உடைந்து போனது.. இந்தியா தனது சிறந்த தலைவர்களில் ஒருவரை இன்று இழந்துவிட்டது.. தனிப்பட்ட முறையில் எனக்கு பல தசாப்தங்களாக வழிகாட்டிய ஒளியை இழந்தது போல் உள்ளது.. வினீத் நாயர் எனக்கு நண்பர், தத்துவஞானி, சகோதரர், வழிகாட்டி மற்றும் சிறந்த தலைவர். ரேவா மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். #ஓம்சாந்தி," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலையாய அமைப்பான நாஸ்காம் (Nasscom) அமைப்பும் வினீத் நாயரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. டெக் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் வினீத் நாயரை "இந்திய தொழில் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க ஆளுமை" என்று பாராட்டி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வினீத் நாயரின் மறைவு இந்திய தொழில் துறைக்குப் பேரிழப்பு. அவரது பங்களிப்பையும், தொலைநோக்கு பார்வையையும் என்றும் நினைவு கொள்வோம் எனவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டு இருந்தார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications