வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானில் வேலை தேடிச் செல்லும் இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மையான நிதிச் சவால்கள் குறித்து ஒரு புதிய விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஜப்பானில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்த விக்கி குமார் என்ற இளைஞர், தனது மாத சம்பள விவரங்களை இன்ஸ்டாகிராம் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இவரின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு சுமார் ரூ.1.32 லட்சம் என்றாலும், அனைத்துக் கழிவுகளும் போக இவரின் கையில் கிடைப்பது வெறும் ரூ.98,000 மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் அபராதம் : அதேபோல், சம்பளம் கணிசமாக குறைய என்ன காரணம் என்பதையும் விக்கி குமார் விளக்கியுள்ளார். அவர் ஜப்பானிய மொழிக்கான ஆரம்ப நிலைத் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக, அவருக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.11,250 அபராதமாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த அபராதத்துடன், வருமான வரி மற்றும் சுகாதாரக் காப்பீடு போன்ற நிலையான பிடித்தங்களும் சேர்ந்து, சம்பளத்தைப் பாதியாக குறைக்கிறது.

விக்கி குமாரின் இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகரங்களில் ஒன்றான டோக்கியோவில், இந்த ரூ.98,000 வருமானத்தில் ஒரு புதிய பொறியாளரால் நிம்மதியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல பயனர்கள், இந்தியாவில் ஒரு புதிய பொறியாளரின் ஆண்டு சம்பளம் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருக்கும் நிலையில், ஜப்பானில் இந்த சம்பளம் போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டோக்கியோவின் அதிக வாழ்க்கை செலவு : சமூக வலைதள பயனர்கள், டோக்கியோவின் வாழ்க்கை செலவுகளை மிக துல்லியமாக கணக்கிட்டுப் பதிவிட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டில், டோக்கியோவில் ஒரு தனி நபர் வாழும் மாதச் செலவு அவரது வாழ்க்கை முறையைப் பொறுத்து ரூ.84,000 முதல் ரூ.1.96 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
அங்கு வாடகைக்கே ரூ.39,000 முதல் ரூ.45,000 வரை செலவாகும். உணவுச் செலவு ரூ.17,000, சுகாதாரக் காப்பீடு ரூ.11,000, போக்குவரத்து மற்றும் பிற செலவுகள் சுமார் ரூ.10,000 என்று பார்த்தால், கையில் கிடைக்கும் ரூ.98,000-இல் இருந்து சுமார் ரூ.75,000 முதல் ரூ.85,000 வரை செலவுகள் உடனே கரைந்துவிடும் என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.
அதாவதும் சேமிப்புக்கு மிக குறைந்த தொகையே மிஞ்சும், அல்லது சேமிக்கவே முடியாமல் கூட போகலாம். இந்த சூழலில், விக்கி குமார் போன்ற புதிய பொறியாளர்கள், வெளிநாட்டு வேலை கவர்ச்சியாக தோன்றினாலும், அங்கே உள்ள அதிக செலவுகள் மற்றும் மொழித் தேர்வு போன்ற நிபந்தனைகளால் பொருளாதார ரீதியில் ஒரு சவாலான நிலையில் தள்ளப்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications