நாட்டில் பலரும் தங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ப சம்பளம் பெறாமல், மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போதும், பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கான நியாயமான மதிப்பீடு இல்லாத சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், வாழ்க்கைச் செலவுகளை கடந்து வாழ்வது கடினமாக இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றி, அனைத்து திறமையானவர்களுக்கும் நியாயமான ஊதிய வாய்ப்புகளை வழங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பணியாளர்களின் நம்பிக்கைக்கும் அவசியமான ஒன்று.

அதே சமயம், சிலர் வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி தனக்கான ஊதியத்தைப் பெற முடியாமல் இருப்பதால், சொந்தமாக தொழில் தொடங்குவதை தேர்வு செய்கின்றனர். சொந்த தொழில், முதலில் சிரமமான பாதையாகத் தோன்றினாலும், இது தன்னம்பிக்கை வளர்க்கும் வாய்ப்பாகவும், வருமானத்தை நிரந்தரமாக அதிகரிக்க உதவும் வழியாகவும் இருக்கும்.
இந்த சூழலில் தான், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தனது சம்பளம் எப்படி அதிகரித்தது என்பது பற்றி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், முதல் வேலைக்கு ரூ.26 லட்சம் சம்பளம் என்றும், இரண்டாவது வேலைக்கு ரூ.28 லட்சம், மூன்றாவது வேலைக்கு ரூ.70 லட்சம் சம்பளம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் ஐஐடி பட்டம் எதுவும் பெறவில்லை. எம்பிஏ-வும் படிக்கவில்லை. ஆனால், கடினமாக வேலை செய்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த எக்ஸ் தள பயனர்கள், அந்த இன்ஜினியரின் வேலை துறை என்ன? சம்பள பேச்சுவார்த்தை எப்படிச் செய்தார்? எந்த திறன்கள் அவரை இத்தகைய வெற்றிக்குக் கொண்டு வந்தன? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பினர்.
அதில் ஒரு பயனர், "எனது முதல் வேலை சம்பளம் ரூ.1.8 லட்சம்" என்று கூறினார். மற்றொரு பயனர், "அண்ணா.. உன் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை எப்படி இருக்கும்..? உங்கள் வேலை மிகவும் கடினமாக இருக்குமா..?" என்று கேட்டுள்ளார். ஒருசிலர், தங்களுக்கே இப்படிப்பட்ட சாதனைகள் உண்டாகிய அனுபவங்களை பகிர்ந்தனர். மற்றவர்கள், இந்த ட்வீட்டை படித்து, எதிர்காலம் குறித்து நம்பிக்கை மற்றும் ஊக்கம் பெற்றனர்.
அதில் ஒரு பயனர், "இந்தப் பதிவு எனக்கு மன அழுத்தத்தை தந்தது" என்று தெரிவித்துள்ளார். அதாவது, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், தன்னை குறைவாக உணர்ந்துள்ளார். மற்றொருவர், "உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. இது உண்மையில் பெரிய சாதனை தான்" என்று தெரிவித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் பதிவு, கடின உழைப்பும் திறமையும் இருந்தால் பெரிய வெற்றி பெற முடியும் என்பதற்கான நேரடி சான்றாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications