வழக்கமாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் வருமானம் கிடைக்கும். ஆனால் காய்கறிகளைப் பயிரிட்டால் 40 நாட்களில் வருமானம் ஈட்டலாம் என்று எண்ணி ஒரு இளம் விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிரிடத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தற்போது மாதம் ரூ. 50,000 வரை வருமானம் பெற்று வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எடப்பள்ளி மண்டலத்தில் உள்ள வத்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயியான பானுசந்தர். அவர் முதலில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இதனால் அவர் காய்கறி சாகுபடி செய்யலாம் என்று எண்ணியுள்ளார்.

இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கருவேப்பிலை, கத்தரிக்காய், பாக்கு, சுண்டைக்காய், கீரை போன்றவற்றை பயிரிட்டுள்ளார். இவர் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக சுமார் 50,000 ரூபாய் செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் செடிகளை நடவு செய்த 40 நாட்களிலேயே அந்த செடிகள் அறுவடைக்கு தயாராகிவிடும். இதனைத் தெரிந்து கொண்ட பானுச்சந்தர் கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் செடியை தனது நிலத்தில் நட்டுள்ளார். வெண்டைக்காய் இரண்டு நாட்களுக்குள் சுமார் 20 தட்டுகளில் நிரப்பும் அளவு காய்த்துத்துள்ளது.
கத்திரிக்காய் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் 15 தட்டுகளில் நிரப்பும் அளவும் காய்த்துத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் சுமார் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனக் கூறுகிறார் இந்த ஏழை விவசாயி. இதன் மூலம், வாரத்திற்கு சுமார் 12,000 ரூபாய் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மாதத்திற்கு ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக கூறுகிறார். இந்த செடிகளின் பருவ காலம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இதனை இவர் கடந்த மூன்று மாதங்களாக தான் செய்து வருகிறார். இந்தச் செடிகளை சாகுபடி செய்வதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதன்பிறகு இந்த செடிகளை சுத்தம் செய்துவிட்டு மற்ற பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளார். விவசாயிகளை ஆதரிப்பதற்காக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காய்கறி விவசாயத்திற்கு மாற பானுசந்தர் முடிவு செய்தபோது, ஒரு ஆண்டிற்கு பலமுறை அறுவடை செய்யக்கூடிய பயிர்களை தேர்வு செய்துள்ளார். உதாரணமாக, வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் போன்றவை விரைவாக வளரும். மேலும் அதிகமான விளைச்சலை தரும்.
இந்தப் பயிர்களைத் தேர்வு செய்வதன் மூலம், நடவு செய்த 40 நாட்களில் வருமானம் ஈட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெற்பயிர்களை விட காய்கறி விவசாயத்தில் அதிக லாபம் கிடைப்பதாகவும் மாத வருமானம் ஈட்ட முடிகிறது என்றும் கூறியுள்ளார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் நெற்பயிர் மட்டுமின்றி காய்கறிகளையும் சேர்த்து பயிரிட்டால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications