தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் தரும் தெலங்கானா அரசு!! ஐதராபாத்துக்கு பொட்டிய கட்டிடலாமா?

தெலங்கானா அரசின் மாதாந்திரச் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மின்சாரத் துறையில் தூய்மைப் பணியாளர்கள் போன்ற நான்காம் நிலை ஊழியர்கள்கூட மாதத்திற்கு சுமார் ரூ2 லட்சம் வரை ஊதியம் பெறுவது கவனத்தை ஈர்க்கிறது.

அம்மாநில தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் வெளியிட்ட தகவல்படி, 2014இல் மாநிலம் உருவானபோது ரூ 1,500 கோடியாக இருந்த இந்தச் செலவு, தற்போது ரூ6,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது நிலையான செலவினங்களில் 300 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது; தேர்தல்களை ஒட்டி நடந்த ஊதிய திருத்தங்களே முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் தரும் தெலங்கானா அரசு!!

பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மாநாட்டில் பேசிய ராமகிருஷ்ணா ராவ், பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் உயரதிகாரிகள் மற்றும் அரசியலமைப்புத் தலைவரின் ஊதியத்தையும் மிஞ்சுவதாக விளக்கினார். குறிப்பாக, மாநில மின்சார வாரியங்களில் தலைமைப் பொறியாளர்கள் மாதத்திற்கு ரூ.7 லட்சம் வரை பெறுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் உட்பட நான்காம் நிலை ஊழியர்கள்கூட சுமார் ரூ 2 லட்சம் மாத ஊதியம் ஈட்டுகின்றனர் என்றார்.

பிற அரசுத் துறைகளைப் போலன்றி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுவதே மின்வாரிய ஊழியர்களின் உயர் சம்பளத்திற்குக் காரணம் என்று ராவ் மேலும் விளக்கினார். இந்த அதிக ஊதியப் போக்கு மின்சாரத் துறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஆரம்ப நிலை மாநகராட்சி பணியாளர்கள் கூட மாதத்திற்கு சுமார் ரூ 28,000 பெறுகின்றனர். மூன்று தசாப்தங்கள் பணி அனுபவம் கொண்ட ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தை பெற முடியும் என கூறியுள்ளார்.

கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் (GHMC) நிரந்தரப்படுத்தப்பட்ட 2 சதவீத துப்புரவுப் பணியாளர்களுக்கு, இதர சலுகைகள் இல்லாமல், சராசரியாக ரூ 70,000 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இத்தகைய கவர்ச்சிகரமான ஊதியக் கட்டமைப்பு அரசு வேலைகளுக்கான போட்டியைத் தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 563 குரூப்-1 பணியிடங்களுக்கு, ஒரு இடத்திற்கு 799 பேர் என விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அதிகரிக்கும் செலவினங்கள் இருந்தபோதிலும், வலுவான பொருளாதார செயல்திறனால் மாநிலம் நிதிச் சுமையைத் தாங்கி நிற்கிறது என்று தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா ராவ் தெரிவித்தார். தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 11 சதவீதம் என்பதையும், வருவாய் ஆதாரங்கள் சீராக அதிகரிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பின் உதவியுடன், ரூ7,000 கோடி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, 6 சதவீத மட்டுமே பிழையுடன் செயல்படுத்தப்பட்டதாகவும் ராவ் தெரிவித்தார்.

இருப்பினும், முன்வைக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிக் கொள்கை குறித்த ஒரு தீவிரமான பிம்பத்தை அளிக்கின்றன. தெலங்கானா தனது முதல் பத்தாண்டுகளில் சுமார் ரூ15 லட்சம் கோடி மொத்தச் செலவினத்தைச் சந்தித்தது. இதில், சுமார் ரூ12 லட்சம் கோடி (80 சதவீதம்) சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்பட்டது. சொத்து உருவாக்கத்திற்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் இன்றியமையாத மூலதனச் செலவு சுமார் ரூ3 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. அதே காலகட்டத்தில், சொத்து விற்பனையில் ரூ15,000 கோடி மட்டுமே கிடைத்தது. இந்த புள்ளிவிவரங்கள் அரசின் நிதி முன்னுரிமைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+