அமெரிக்காவின் நியூயார்க் நகரையே மிஞ்சும் “Future City” தெலுங்கானாவில் வருது..!!

தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவின் நான்காவது முக்கிய நகரமாக Future Cityஐ உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை தற்போது ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் சைராபாத் ஆகிய மூன்று நகரங்கள் பிரதான நகரங்களாக இருக்கின்றன.

இந்த மூன்று நகரங்களிலும் தொழில்துறை வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் இங்கே முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நான்காவதாக ஃபியூச்சர் சிட்டி என்ற பெயரில் ஒரு நகரத்தை தெலுங்கானாவில் உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஃபியூச்சர் சிட்டி அமையும் என சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரையே மிஞ்சும் “Future City” தெலுங்கானாவில் வருது..!!

நவீன தொழில்நுட்பங்களின் தலைநகராக இது இருக்க வேண்டும் என்பதுதான் ரேவந்த் ரெட்டியின் திட்டமாகும். இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்கான பதில்களை வழங்கக்கூடிய ஒரு நகரமாக ஃபியூச்சர் சிட்டி இருக்கும் என தெலுங்கானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டு நகரமாகவும் இது இருக்கும் என கூறியுள்ள அவர் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மையமாகவும் மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாகவும் இந்த பிஃயூச்சர் சிட்டி அமையும் என தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி விளையாட்டு ,மென்பொருள் மற்றும் மருந்து துறைகளுக்கான இந்தியாவின் முக்கிய நகரங்களில் இடம் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது சுமார் 20 நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஃபியூச்சர் சிட்டி தொடர்பான தன்னுடைய திட்டங்களை எடுத்துரைத்து பல்வேறு நிறுவனங்களையும் அங்கே முதலீடு செய்யும்படி கோரினார்.

முன்னதாக ஜூலை 31ஆம் தேதி தெலுங்கானா சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஃபியூச்சர் சிட்டி தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஹைதராபாத் நகரத்திற்கு துணை நகரங்களாக செகந்திராபாத் மற்றும் சைராபாத் ஆகிய நகரங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் வருங்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டும் நான்காவதாக ஒரு நகரத்தை உருவாக்க போகிறோம் அதன் பெயர் ஃபியூச்சர் சிட்டி என சட்டசபையில் அப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செப்டம்பர் மாதம் இந்த பகுதியில் செயற்கை நுண்ணறிவு நகரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக தெலுங்கானா அரசுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக தெலுங்கானா மாநில அரசு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஃபியூச்சர் சிட்டியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது.

இதனிடையே நியூயார்க்கை விட முன்னேறிய நகரமாக ஃபியூச்சர் சிட்டி இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+