தெலங்கானா மாநிலம் முகமது நகரை சேர்ந்தவர் பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி ஒரு தக்காளி விவசாயி. கடந்த ஆண்டு அவர் பல கோடி ரூபாய்க்கு தக்காளியை சாகுபடி செய்து விற்று லாபம் பார்த்துள்ளார். மார்க்கெட்டில் எப்போதெல்லாம் தக்காளிக்கு கிராக்கி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகளவு தக்காளியை விளைவிக்கும் டெக்னிக்கை பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி கற்று வைத்துள்ளார்.
ஏப்ரல், மே மாதங்களில் அவர் தக்காளியை சாகுபடி செய்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அறுவடை செய்கிறார். இந்த மாதங்களில் பொதுவாகவே மார்க்கெட்டில் தக்காளிக்கு அதிக டிமாண்ட் இருக்கும்.

2023இல் தக்காளி விலை கிலோ ரூ.200ஐ தாண்டியது. கடந்த ஆண்டு 8 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்த மகிபால் ரெட்டி இப்போது அதை 30 ஏக்கருக்கு அதிகரித்துள்ளார்.
கோடைக்காலத்தில் தக்காளி செடியை விவசாயிகள் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். கோடையில் தக்காளியை நிழற்காய்ச்சலாக விளைவிக்க வேண்டும் என்கிறார்.
ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.3 லட்சத்தை விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும். கூலி, உழுதல், உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இதர செலவுகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும்.மழை மற்றும் குளிர் காலங்களில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை தான் செலவு செய்கின்றனர். தனது நிலத்தில் ஏக்கருக்கு 35 டன் தக்காளியை மகிபால் ரெட்டி விளைவிக்கிறார்.
மழைக்காலத்தில் விளைச்சல் 17 டன்னுக்கும் குறைவாக இருந்துள்ளது.
கடுமையான கோடை முடிந்ததும் தக்காளி செடிகள் பலத்த மழையைத் தாக்குப்பிடிக்க வேண்டும். இதற்கு நிழல் தரும் வலைகளை பயன்படுத்த வேணடும் என்று அவர் கூறுகிறார்.
மற்ற காய்கறிகள் எல்லாம் 30 முதல் 45 நாட்களில் விளைந்து விடும். ஆனால் தக்காளி விளைவதற்கு 90 நாட்களாவது ஆகும்.
காய்கறிகளை விளைவித்து வரும் ஹனீப் என்ற விவசாயி தக்காளி சாகுபடியில் அதிக அபாயங்கள் இருப்பதால் கடந்த 2 வருடங்களாக தக்காளியை விளைவிப்பதில்லை என்கிறார். அதேநேரத்தில் மகிபால் ரெட்டி துணிந்து தக்காளியை சாகுபடி செய்து லாபம் ஈட்டுவது பாராட்டுக்குரியது என்கிறார்.
மகிபால் ரெட்டி இந்த ஆண்டு 30 ஏக்கரில் தக்காளியை வெற்றிகரமாக பயிரிட்டார். சில்லறை மார்க்கெட்டில் விலைகள் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் விளைச்சலைப் பெறத் தொடங்கினார்.
இரண்டு வாரங்களுக்கு முன், மொத்த மார்க்கெட்டில் கிலோ 18 ரூபாய்க்கு கிடைத்து. தற்போது, 50 ரூபாயை தாண்டியுள்ளது. பல ஏற்ற இறக்கங்களை கண்டதாக கூறிய ரெட்டி, இந்த ஆண்டு மார்ச் மாதம் தக்காளியை கிலோ ரூ.7க்கு விற்றதாக கூறினார்.
story written by: Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications