உலகின் முன்னணி பிபிஓ சேவை நிறுவனமான டெலிபர்பாமென்ஸ்-ன் ஊழியர்கள் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தனது ஊழியர்கள் வீட்டில் AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு ஊழியர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
பல லட்சம் ஊழியர்களின் தனியுரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை எடுக்க டெலிபர்பாமென்ஸ் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?!
டெலிபர்பாமென்ஸ் பிபிஓ சேவை
டெலிபர்பாமென்ஸ் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவில் பதிப்பிடப்படும் உலகின் முன்னணி பிபிஓ நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், கூகுள், உபர் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பிபிஓ சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் பல வங்கிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
3.8 லட்சம் ஊழியர்கள்
டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அலுவலகத்தில் சுமார் 3.8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 70,000 ஊழியர்கள் இந்திய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தொற்றுக் காரணமாக இந்நிறுவனத்தின் சுமார் 2.4 லட்சம் ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள்.
AI கேமரா மூலம் கண்காணிப்பு
இந்நிலையில் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகளையும், ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கண்காணிக்க AI கேமரா ஊழியர்கள் வீட்டில் பொருத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கொலம்பியா அலுவலக ஊழியர்கள் ஒப்பந்தம்
இதன் முதல் கட்டமாக டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் கொலம்பியா அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி AI கேமரா மூலம் ஊழியரின் குடும்பம் (குழந்தைகள் உட்பட), ஊழியரின் வீடு, வாய்ஸ் அனலிட்டிக்ஸ், சேகரிப்புச் செய்யப்பட்ட தரவுகளைப் பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துள்ளது இந்நிறுவனம்.
டெலிபர்பாமென்ஸ் ஜெய்ப்பூர் கிளை
இந்நிலையில் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் கூறுகையில் ஊழியர்களின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நேரத்தில் மட்டும் கண்காணிப்புச் செய்யப்படும்.
ஸ்னாப்ஷாட் மூலம் கண்காணிப்பு
ஊழியர்கள் கண்காணிக்கப்படும் நேரத்தில் ஊழியர்கள் பணியாற்றும் இடத்தையும், பகுதிகளையும் பாதுக்காப்பு கருத்து ஸ்னாப்ஷாட் எடுத்துச் சேமிக்கப்படும் எனவும் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்குப் பதில் அளித்துள்ளது.
வீடியோ கண்காணிப்பு இல்லை
மேலும் மிகவும் சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இத்தகைய கடுமையான பாதுகாப்பு காரணிகளை அமல்படுத்த நிர்ப்பந்தம் செய்யும். இந்த AI கேமரா மூலம் ஊழியர்கள் பணியாற்றுவதை ஸ்னாப்ஷாட் மட்டுமே எடுக்க அனுமதி உண்டு, தொடர்ந்து வீடியோ வாயிலாகக் கண்காணிக்க அனுமதி இல்லை எனவும் டெலிபர்பாமென்ஸ் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் கிளை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
அல்பேனியா அரசு தடை
டெலிபர்பாமென்ஸ் நிறுவனம் AI கேமரா மூலம் ஆப்பிள் பிரிட்டன் கணக்கில் பணியாற்றும் ஊழியர்கள் பணியாற்றுவதைக் கண்காணிக்கும் திட்டத்தை அல்பேனியாவில் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டபோது. அல்பேனியா அரசு 2020ஆம் ஆண்டு இறுதியில் இதற்குத் தடை விதித்தது.
பிபிஓ ஊழியர்கள்
ஏற்கனவே பல பிபிஓ ஊழியர்கள் TimeDoctor, Toggl, Timely மற்றும் Tickspot போன்ற பணியாற்றும் நேரத்தில் டிராக் செய்யும் செயலிகளையும், Basecamp, Asana மற்றும் Trello போன்ற திட்ட மேலாண்மை கருவிகளையும் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது கேமரா மூலம் கண்காணிப்புச் செய்வது இத்துறை ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications