இந்தியாவின் பல முன்னணி குடும்ப வர்த்தகங்கள் தற்போது தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், ஐபிஓ-வில் பட்டியலிடவும் திட்டமிட்டு வருகிறது. அப்படி பல வருடங்களாக குடும்ப வர்த்தக கட்டமைப்பிலேயே இருந்த ஹல்திராம்ஸ் பிராண்ட் தற்போது பெரும் மதிப்பீட்டில் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
சிங்கப்பூர் அரசின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான தெமாசெக் (Temasek Holdings), இந்தியாவின் மிகப்பெரிய ஸ்நாக்ஸ் தயாரிப்பாளரான ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெமாசெக், ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் நிறுவனத்தை சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்நிறுவனத்தில் 10% முதல் 15% வரையிலான பங்குகளை வாங்க 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இந்திய ஸ்னாக்ஸ் வகைகளுக்குப் பெயர்போன நிறுவனம் தான் இந்த ஹல்திராம்ஸ், குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் வகைகள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் வட இந்திய பிராண்டாக இருந்தாலும் தென்னிந்தியாவிலும் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் தனது நற்பெயரையும், பிராண்ட் தாக்கத்தையும் பணமாக்க பல மாதங்களாக தனது பங்குகளை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறது. முதலில் டாடா குழுமம் இந்த பிராண்டை மொத்தமாக கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதை தொடர்ந்து பல வெளிநாட்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களும் பங்குகளை வாங்க முயற்சி செய்தது.
தற்போது பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் முதலீட்டை, ஹல்திராம்ஸ் தனது எதிர்கால விரிவாக்கத்திற்கும் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், அதன் IPO கனவிற்கு முக்கிய படிக்கட்டாக இருக்கும். ஆனால் இந்த 1 பில்லியன் டாலர் சுமார் 8450 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன, இறுதி ஒப்பந்தத்திற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.
1930-களில் நிறுவப்பட்ட ஹல்திராம்ஸ், இனிப்பு மற்றும் கார வகை ஸ்நாக்ஸ்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இதோடு இந்நிறுவனம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 43 உணவகங்களை இயக்கி வருகிறது. ஹல்திராம்ஸ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரையில் அகர்வால் குடும்பம் தான் நிர்வாகம் செய்து வருகிறது.
இதேவேளையில் சிங்கப்பூர் தெமாசெக், கடந்த சில வருடங்களாக இந்தியாவில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது முதலீடுகளை தொடர்ந்து அதிகரிக்கும் திட்டத்தில் தற்போது ஹல்திராம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications