உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு பெண் பாங்க் ஆப் பரோடா வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சத்தை இழந்துள்ளார். பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக தான் வங்கி லாக்கரில் பணத்தை வைக்கிறோம், ஆனால் இங்கு லாக்கரில் பணத்திற்கு யாருக்கும் நடக்காத பிரச்சனை வந்துள்ளது.
மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அல்கா பதக் தனது மகளின் திருமணத்திற்காக ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 18 லட்சம் ரூபாய் பணத்தையும் மற்றும் சில நகைகளை பாங்க் ஆப் பரோடா வங்கி லாக்கரில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் KYC சரிபார்ப்பு மற்றும் வருடாந்திர லாக்கர் பராமரிப்புக்காக அவரை வங்கி அதிகாரிகள் அழைத்தபோது, லாக்கரை செக் அல்கா பதக்-க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தையும் நகையும் பாதுகாப்பாக வைத்திருந்த லாக்கரில் பணத்தை கரையான் அரித்து பணம் மொத்தமும் அழிக்கப்பட்டது தெரிய வந்தது.
அல்கா பதக் தனது லாக்கரைத் திறந்து பார்த்தபோது, நோட்டுகள் கரையான்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, வங்கி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாக தெரிகிறது. அல்கா பதக் சிறுதொழில் நடத்துவதோடு, டியூஷன் வகுப்புகளையும் எடுத்து வரும் அவர் பணத்தை லாக்கரில் வைத்திருந்தார்.
ஆனால் பணத்தை சேமிப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வங்கி லாக்கரில் இதுப்போன்ற காதிங்களை வைக்க கூடாது பலரும் தெரிந்துக்கொண்டனர். பொதுவாக வங்கிகள் லாக்கரின் தட்பவெட்ப நிலையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை எடுக்கும். குறிப்பாக மழை நீர் ஓழுகுதல், கரையான் போன்ற பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு பணிகளை செய்யும்.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பெண் ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரில் ரூ.2.15 லட்சத்தை வைத்திருந்தார். அந்த பெண் ரூ.2 லட்சத்தை துணி பையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, மீதமுள்ள ரூ.15,000 வெளியில் வைத்திருந்ததாக தெரிகிறது. 2 லட்சத்துடன் வீடு திரும்பிய அவர், வீட்டுக்கு சென்று பணத்தை பார்த்த போது கரையான் தின்றுவிட்டதை அறிந்து பதறிபோனார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications