பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்-ஐ அவரது குடும்பத்துடன் சந்தித்தது மட்டும் அல்லாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்திய அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதன் ரியாக்ஷன் தற்போது தெரியத் துவங்கியுள்ளது.
டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்க வேண்டும் என பல முறையை முயற்சி செய்து தோல்வி அடைந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் எலான் மஸ்க், பிரதமர் மோடியைச் சந்தித்த பின்பு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் தனது LinkedIn பக்கத்தில் 13 வெவ்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேடுவதாகப் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையில் தனது செயல்பாடுகளை விரைவில் டெஸ்லா துவங்கத் திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது.
டெஸ்லா நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் தொடர்புகள் முதல் பேக் ஆஃபீஸ் பணிகள் வரை பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேடி வருகிறது. மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டார்லிங்க் சேவைக்காகப் பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்கிய எலான் மஸ்க் டெஸ்லா செயல்பாடுகளை மும்பை மற்றும் டெல்லி-யில் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தற்போது டெஸ்லா இந்தியாவில் இன்சைட் சேல்ஸ் அட்வைசர், கஸ்டமர் சப்போர்ட் சூப்பர்வைசர், கஸ்டமர் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், சேவை ஆலோசகர் மற்றும் மேலாளர், ஆர்டர் ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், டெஸ்லா அட்வைசர், பார்ட்ஸ் அட்வைசர், பிசினஸ் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட், ஸ்டோர் மேனேஜர் மற்றும் சர்வீஸ் டெக்னீஷியன் போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை நியமிக்க உள்ளது.
பணியிடங்களைப் பார்க்கும் போதும், டெஸ்லா தனது முதல் ஷோரூம்-ஐ விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் திறக்கும் என தெரிகிறது. இந்த 13 பணியிடங்கள் தொழிற்சாலைக்கானது இல்லை என்ற கருத்தும் உள்ளது. இதனால் டெஸ்லா முதலில் தனது ஷோரூம் உடன் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்கிறது.
எப்படி ஆப்பிள் தனது முதல் ஷோரூம்-களை டெல்லி மற்றும் மும்பையில் திறந்ததோ அதேபோல் தற்போது டெஸ்லாவும் பாலோ செய்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்களுக்கு வரி விலக்கு கொடுப்பது குறித்து இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளும் மோடி அரசு வெளியிடாத நிலையில் டெஸ்லா கார்கள் அதிகப்படியான வரி விகிதங்கள் உடன் தான் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.
சமீபத்தில் இந்திய அரசு 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் ரக கார்களின் மீதான அடிப்படை சுங்க வரியை 110% லிருந்து 70% ஆகக் குறைத்துள்ளது. இறக்குமதி வரியில் இந்த குறைப்பு, டெஸ்லா கார் விற்பனைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications