டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர்-ஐ கைப்பற்றும் வேலையில் பிசியாக இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வருகிறார்.
அப்படி எலான் மஸ்க் எடுத்த முக்கியமான முடிவு தான் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம், வொர்க் பரம் ஹோம்-க்கு முடிவு...
இதில் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் என நினைத்த பலருக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிங்கப்பூர் உயர் அதிகாரியை திடீரெனப் பணிநீக்கம் செய்துள்ளார்.
டெஸ்லா
டெஸ்லா நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த சிங்கப்பூர் நாட்டு வர்த்தகத்தின் உயர் தலைவர் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்டோபர் போசிக்ஸ் இதற்கான விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்
சிங்கப்பூர் நாட்டின் டெஸ்லா வர்த்தகத்தின் மேனேஜர் ஆன கிறிஸ்டோபர் போசிக்ஸ் தனது லிங்க்ட்இன் பதிவில் "தென்கிழக்கு ஆசியாவில் டெஸ்லாவின் முதல் நாட்டு மேலாளராக இருந்ததில் பெருமைப்படுகிறேன்" என்று எழுதியுள்ளார்.
கிறிஸ்டோபர் போசிக்ஸ்
கடந்த ஒரு ஆண்டில், சிங்கப்பூரில் டெஸ்லா நிறுவனத்திற்கான வர்த்தகத்தை அடிமட்டத்தில் இருந்து உருவாகி, இந்நாட்டுக் கார் சந்தையில் மாடல் 3 அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராகவும், முக்கியக் காராகவும் வர்த்தகத்தை மேம்படுத்தப்பட்டது.
லிங்கிடுஇன் பதிவு
இதுபோக 2 டெஸ்லா ஷோரூம்கள், 1 டெஸ்லா சர்வீஸ் சென்டர் ஆகியவற்றை அமைத்தோம். சிங்கப்பூர் தீவு முழுவதும் 7 சூப்பர்சார்ஜர்களின் நெட்வொர்க், மற்றும் மாடல் Y அறிமுகம் செய்யப்பட்டது எனப் பெருமை உடன் கிறிஸ்டோபர் போசிக்ஸ் இந்த லிங்கிடுஇன் பதிவை செய்துள்ளார்.
எலான் மஸ்க்
சில வாரத்திற்கு முன்பும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளார். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளார்.
Work From Home கட்
வீட்டில் இருந்து பணியாற்றும் டெஸ்லா ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் என எலான் மஸ்க் எச்சரித்தார்.
பொருளாதாரம்
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எனக்குப் பொருளாதாரம் குறித்துத் தவறாகத் தோன்றுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தப்பிக்க டெஸ்லா நிறுவனத்தின் இருந்து 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டும் நிலை வரலாம் என்று கூறினார்.
புதிய வேலைவாய்ப்பு
மேலும் டெஸ்லா நிர்வாகத்திடம் அனைத்து பிரிவுகளிலும் உலக நாடுகள் அனைத்திலும், புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தான் சிங்கப்பூர் உயர் அதிகாரியான கிறிஸ்டோபர் போசிக்ஸ் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications