உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து மக்களும், வர்த்தகமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
சமீபத்தில் இந்திய அரசு உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாட்டு விமானச் சேவையை அளிக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்றுக் காரணமாக டெஸ்லா தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது.
டெஸ்லா
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமெரிக்காவைத் தாண்டி மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலைகளைச் சீனா மற்றும் ஐரோப்பாவில் வைத்துள்ளது. டெஸ்லா-வுக்கு இணையான வர்த்தகம் சீனாவில் இருக்கும் காரணத்தால் சீனாவின் ஷாங்காய்-யில் தொழிற்சாலையை அமைத்தது.
கொரோனா தொற்று
இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் காரணத்தால், ஷாங்காயில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலை 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பைத் தொழிற்சாலை நிர்வாகம் சப்ளையர்கள், சப்ளை செயின் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
2 நாள் தொழிற்சாலை மூடல்
சீனாவில் டெஸ்லா கார்களுக்கு டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஷாங்காங் 24 மணிநேரமும் இயங்கும் தொழிற்சாலையாக விளங்குகிறது. இதனால் இத்தொழிற்சாலையில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம், இதனால் கொரோனா தொற்று பரவ அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் 2 நாள் தொழிற்சாலை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிகாபேக்டரி 3
ஜிகாபேக்டரி 3 எனச் செல்லமாக அழைக்கப்படும் ஷாங்காய் தொழிற்சாலையில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது சீன அரசு ஷாங்காங் பகுதியில் மக்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளது.
ஜெர்மனி மற்றும் ஜப்பான்
சீனா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்கள் சீன வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் மட்டும் ஷாங்காய் தொழிற்சாலையில் சுமார் 56,515 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது, இதில் 33,315 கார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications