எதிர்காலத்தை ஓரளவுக்கு கணித்து நீண்ட கால அடிப்படையில் தொழிலோ அல்லது விவசாயமோ எது செய்தாலும் அது நல்ல பலனை அளிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். விவசாய குடும்பமான தாசா சித்தேஷ்சுவாமி-யின் குடும்பம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
தஞ்சாவூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தாசா சித்தேஷ்சுவாமி. இவர் 1997ல் பொறியியல் பட்டம் பெற்றார், படிக்கும்போதே அவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. 1996ல் அவரது தந்தை கோடைகால பயிர்களை பயிரிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்தார். இது அவரை மிகவும் ஈர்த்தது.
ஆனாலும் படித்து முடித்தவுடன் அவர் 2 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்பு 1999ல் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, தனது தந்தைக்கு உதவியாக 90 ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கை விவசாயத்தை செய்ய தொடங்கினார். இப்போது தாசா சித்தேஷ்சுவாமி குடும்பத்தினர் மீது புகழ் வெளிச்சம் பட தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் 27 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை செய்த ஒரு செயல் தான். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பேச்சுக்களை காதில் வாங்காமல் அன்று தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நடவு செய்த டிம்பர் மரங்கள் இன்று அவரது குடும்பத்தினருக்கு கோடிக் கணக்கில் வருவாயை அளிக்கிறது.

தாசா சித்தேஷ்சுவாமி குடும்பத்தின் டிம்பர் மர வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம். 1996ல் பத்திரிகைகளில் டிம்பர் மரம் வளர்ப்பு மற்றும் டிம்பர் மர கடத்தல் தொடர்பான செய்திகள் வாடிக்கையாக வெளிவந்தது.
ஒரு செய்தியில், காரின் டிக்கியில் 200 கிலோ டிம்பர் மரக்கட்டைகள் கடத்தப்பட்டு, ஒரு கிலோ ரூ.1,500 வரை விற்கப்படுவதாக வெளியான தகவல் தாச சித்தேஷ்சுவாமி குடும்பத்தினரை ஈர்த்தது. மேலும், டிம்பர் மரத்துக்கான தேவை அதிகம் இருப்பதையும், ஆந்திராவில் இவற்றின் விளைச்சல் அதிக லாபம் ஈட்டுகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இதனையடுத்து டிம்பர் மரம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் விசாரித்தனர்.
பின்னர் ஆந்திராவில் இருந்த விதைகளை கொள்முதல் செய்து, நர்சரியில் 2 ஏக்கர் நிலத்தில் 2,000 மரக்கன்றுகளை பயிரிட்டனர். நடவு செய்வதற்கு முன், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களின் முடிவு குறித்து சந்தேகத்தை எழுப்பினர்.
மேலும் மரம் வளர்ப்பதில் ஏன் இவ்வளவு முதலீடு செய்கிறீர்கள், என்ன லாபம் கிடைக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஆனால் தாசா சித்தேஷ் சுவாமியின் தந்தை அவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல், எதிர்கால லாபகரமான வியாபாரத்தை கணித்து மரங்களை நட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது மூப்பு காரணமாக தாச சித்தேஷ்சுவாமியின் தந்தை காலமானார். தந்தை மறைவு அவருக்கு பெரிய இழப்பாக அமைந்தது. மேலும் சில காலம் பண்ணையை நிர்வகப்பதில் தாசா சவால்களை எதிர்கொண்டார்.
தற்போது டிம்பர் மரங்கள் நட்டு ஏறக்குறைய 27 ஆண்டுகள் ஆகி விட்டநிலையில், தற்போது அவை நல்ல வளர்ந்து வெட்டுவதற்கு உகந்த நிலையில் உள்ளது. டிம்பர் மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி பெற்று விட்டார். அடுத்த சில மாதங்களில் வெட்டுவதற்கு உகந்த மரங்களை தேர்வு செய்து வெட்ட உள்ளார். இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு பெரிய வருமானம் கிடைக்கும். அவர் தனது கோடை சாகுபடி நிலத்தை நர்சரியாக மாற்ற அரசிடம் அனுமதி பெற்றார்.
சுமார் 2,000 செடிகளை பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ரூ.50 கோடிக்கு மேல் லாபம் ஈட்டினார். டாரி நர்சரி தனது என்ற உயர் தொழில்நுட்ப நர்சரியில் டிம்பர் மரங்கள், பல்வேறு பழ செடிகள் மற்றும் பல்வேறு அலங்கார செடிகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications