டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வினை பெறலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இது தொடர்பான எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தான் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவலை வெளியிட கூடும் என சொல்லப்படுகிறது.

மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் தொகையை அகவிலைப் படியாக வழங்குகிறது. இதனை 53 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வந்தாலும் அது ஜூலை மாதம் முதல் முன் தேதி இட்டு வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் இதன் மூலம் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை தாண்டி பணவீக்கத்துக்கு ஏற்ப வழங்கப்படும் ஒரு தொகையாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் தான் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பினை அரசு வெளியிட்டது. அதே நடைமுறை நடப்பாண்டிலும் தொடரும் என்றும், ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை உயர்த்தும். ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய அரசு வெளியிடும். கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications