திருப்பூர்: தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் பெரு நகரங்களில் டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை சென்னை உள்ளிட்ட நகரங்களின் அடையாளமாகவும் மாறி இருக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 39 கோடி ரூபாய் செலவில் 7 அடுக்கு கட்டிடமாக இந்த மினி டைடல் பூங்காவை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பூரில் நடைபெற்று வரும் டைடல் பூங்கா கட்டுமான பணியின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. திருப்பூர் நகருக்கு அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
எட்டு தளங்களைக் கொண்ட இந்த கட்டிடம் மொத்த 66,139 சதுர அடி அலுவலக பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய கட்டிடமாக அமைந்துள்ளது. இதன் ஒவ்வொரு தளமும் சுமார் 6500 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளின் புகைப்படங்கள் தான் தற்போது அப்டேட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

வரும் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த டைடல் பூங்கா கட்டுமான பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் இதனை திறந்து வைப்பார் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டெவெலப்மென்ட் கார்ப்பரேஷன் என்பதன் சுருக்கம் தான் டைடல் பூங்கா என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை , கோவை உள்ளிட்ட இடங்களில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற டைடல் பூங்காக்களில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை நிறுவும். இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு உருவாகும். எனவே தான் தமிழ்நாடு அரசு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது.

இதனை நியோ டைடல் பார்க் என்றும் மினி டைடல் பார்க் என்றும் தமிழ்நாடு அரசு அழைக்கிறது. பொதுவாக இந்த வகையான டைடல் பூங்காக்கல் 50,000 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான இடத்தில் அமைக்கப்படும். ஏற்கனவே சேலம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications