பெண்கள் வெறும் கனவு காண்பதற்காக அல்ல, அவற்றை நிஜமாக மாற்றவும் பிறந்தவர்கள். தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் கொண்டு, அவர்கள் பல துறைகளில் புரட்சிகளை ஏற்படுத்தி, உலகத்தை மாற்றி வருகின்றனர். சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் தொழில் முனைவுத்துறையில் (Entrepreneurship) பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளனர். தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்-கள் (Startups) புதிய மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.
பெண்கள் தொழில் தொடங்குவதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். முதலீடு (Investment) பெறுவதில் சிரமம் கொள்கிறார்கள், சமுதாய எதிர்பார்ப்புகளை மேற்கொள்கிறார்கள், மேலும், அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையின்மை மற்றும் மனஅழுத்தம் போன்ற பல போராட்டங்களை கடந்து, அவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். பலரும் ஸ்டார்ட்அப் (Startup) துறையில் நுழைந்து, புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்

தொழில்நுட்பம், இன்று உலகை மாற்றும் மிக முக்கியமான துறை. பல பெண்கள், டிஜிட்டல் துறையில் முன்னேறி, செயற்கை நுண்ணறிவு (AI), மென்பொருள் வளர்ச்சி, ஆன்லைன் பரிவர்த்தனைகள் (E-commerce) போன்ற பல துறைகளில் சாதனை படைத்துள்ளனர். இதில் 'ராதா வேம்பு' என்பவர் ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர் மற்றும் இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான Zoho கார்ப்பரேஷனில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார் .'Zoho Women in Tech' என்னும் நிறுவனம், பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது. பெண்கள் திறமை மிக்கவர்களாக வளர்ந்து, உலகளாவிய சந்தையில் மிகப்பெரிய போட்டியாளர்களாக உருவாகி வருகின்றனர்.
கல்வி, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பெண்கள், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் கல்வி (E-learning) மற்றும் தனிப்பயன் கல்வி முறைகள் (Personalized Learning) மூலம் மாணவர்களுக்கு உதவுகின்றனர். இதில் 'திவ்யா கோகுல்நாத் ' என்பவர் ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர் ஆவார், இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்ட கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். 'Byju's Women Entrepreneurs' பெண்கள் முன்னோடியாக கல்வித் துறையில் புதிய விதமான டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை வழங்குகின்றனர்
பெண்கள், சமூக சேவைகளிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். பாலியல் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, சிறப்பு சமூக சேவைகள், வேலைவாய்ப்பு மேம்பாடு போன்ற துறைகளில் பல பெண்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளனர். இதில் 'ஃபல்குனி நாயர்' 'Self-Help Women Startups' என்னும் நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பெண்களுக்கு சிறு தொழில்களை தொடங்க உதவுகிறது. தையல், ஹேண்டிகிராஃப்ட், வீட்டில் இருந்து தொழில் செய்யும் முறைகள் போன்றவைகளை ஊக்குவிக்கிறது.
பெண்கள் தொழில் தொடங்குவதன் மூலம் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரிக்கிறது, சமுதாயத்தில் பெண்களின் தாக்கம் அதிகரிக்கிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படுகிறது.
பெண்கள் தொழில் தொடங்குவதில் மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, Green Technology, AI & Robotics, Sustainable Fashion, Digital Marketing, Healthcare Innovations போன்ற துறைகள் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சியடையும். இன்னும் பல பெண்கள், தங்கள் கனவுகளை நிஜமாக மாற்றி, உலகத்தையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் தலைமையிலான இந்த ஸ்டார்ட்அப்புகள், பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்து வருகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications