டெக் துறையை ஆட்டிப்படைக்கும் பணி நீக்கங்கள்.. EMI செலுத்த முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்.!!

இந்தியாவில், குறிப்பாகப் பெங்களூரு போன்ற தொழில்நுட்ப நகரங்களில், ஒவ்வொரு நாளும் பலருக்குக் கனவு வேலைகளை வழங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, இப்போது ஒரு இருண்ட பக்கத்தை எதிர்கொண்டுள்ளது. சமீப காலமாக, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நோக்கிய நிறுவனங்களின் மாற்றம், இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த திடீர் வேலை இழப்பு, ஊழியர்களுக்கு மன அழுத்தம் முதல் கடுமையான நிதி நெருக்கடி வரை பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளமான X-இல் 'வெல்த் விஸ்பரர்' (Wealth Whisperer) என்ற பயனர் பகிர்ந்த ஒரு பதிவு, தொழில்நுட்ப ஊழியர்களின் தற்போதைய நிலையைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அந்தப் பதிவில், எனது உறவினரின் கணவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கினார். அதற்காக, ரூ.50 லட்சம் முன்பணம் செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகைக்கு மாதத்திற்கு ரூ.78,000 இஎம்ஐ செலுத்தி வருகிறார். அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். ஆனால், சமீபத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இப்போது, வீட்டு இஎம்ஐ-களை சமாளிக்கவும், புதிய வேலை தேடவும் போராடி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு, தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மாற்றங்களை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

டெக் துறையை ஆட்டிப்படைக்கும் பணி நீக்கங்கள்.. EMI செலுத்த முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்.!!

இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. பலரும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு பயனர், அவருக்கு இன்னும் வயது குறைவாக இருந்தால் (35-40க்குக் கீழ்), அவர் நிச்சயம் மீண்டு வருவார். மைக்ரோசாஃப்ட்-இல் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு மற்றொரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும். சொந்த வீடு எப்போதும் ஒரு பாதுகாப்பை அளிக்கும். ஆனால், அவருக்கு 45 வயதுக்கு மேல் இருந்தால், அது மிகவும் கடினமானதாக இருக்கும். அதற்கு நிறையத் திட்டமிடல் தேவைப்படும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், நிச்சயமற்ற காலங்களில் பெரிய அளவில் கடன் வாங்கிச் சொத்து வாங்குவதன் கடுமையான யதார்த்தம் இது. வருமானம் நின்றுபோகும்போது, மாதாந்திர இஎம்ஐ செலுத்துவது ஒரு கனவாக மாறிவிடும். கனவு இல்லங்களை விட அவசர கால நிதி (Emergency Fund) ஏன் முக்கியம் என்பதை இந்த கதை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், சிஏ நிதின் கௌஷிக் என்ற மற்றொரு பயனர், புனேவில் உள்ள தனது நண்பரின் கதையைப் பகிர்ந்துள்ளார். என் நண்பர் 2021-இல் ரூ.95 லட்சம் மதிப்புள்ள பிளாட்டை வாங்கினார். ரூ.35 லட்சம் முன்பணம் செலுத்திவிட்டு, ரூ.60 லட்சம் கடன் வாங்கினார். 8.5% வட்டியில் 20 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ.52,000 இஎம்ஐ கட்ட வேண்டும். சமீபத்தில் அவர் வேலையை இழந்தார். இப்போது இஎம்ஐ-களைப் பற்றி கவலைப்பட்டு, நேர்காணல்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறி வருகிறார். சொத்து வாங்குவது எளிது. ஆனால், மந்தநிலையின்போது அதைக் கட்டிக்காப்பதுதான் உண்மையான சவால் என்று பதிவிட்டுள்ளார்

ஆரக்கிள் நிறுவனத்தின் பணிநீக்கங்கள்: இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவைக் குறைப்பதற்காகவும், செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் அதிக முதலீடு செய்வதற்காகவும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. ஆரக்கிள் நிறுவனம், இந்தியாவில் அதன் உள்ளூர் ஊழியர்களில் கிட்டத்தட்ட 10% பேரைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும், ஏஐ உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உலகில் வேலை என்பது நிலையற்றது. அதிக ஊதியம், ஆடம்பரமான வாழ்க்கை முறை என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த கணம் என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவே, தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் நிதித் திட்டமிடலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசர கால நிதியை உருவாக்குவது, கடன்களை நிர்வகிப்பது மற்றும் மாற்று வழிகளைத் தேடுவது ஆகியவை மிகவும் முக்கியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+