அமெரிக்க நிறுவனங்கள் ஐடி உள்ளிட்ட சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்கள், நபர்களிடம் இருந்து பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான HIRE சட்டத்தை செனட் சபையில் கொண்டு வந்துள்ளது. இது செனட் மற்றும், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் பின்னர் டிரம்ப் கையெழுத்திட்டு சட்டமாக மாற்றப்படும்.
ஒரு வேளை இது சட்டமானால் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் அல்லது நபரிடமிருந்து ஒரு சேவையைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தும் போது அந்த கட்டணத்தில் 25 சதவீதம் தொகையை வரியாக அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும். இது அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைகளை பெறுவதற்காக இது நாள் வரை செய்த செலவை அதிகரிக்க செய்கிறது .

இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கும் குடியரசு கட்சியினர் இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் அமெரிக்க நிறுவனங்களிடம் வேலையை வழங்குவதிலும் முன்னுரிமை தரும் என கூறுகின்றனர் . ஆனால் உண்மையில் இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் அமெரிக்க நிறுவனங்களிடம் இது போன்ற ஐடி சேவைகளை பெறுவதற்கான திறன்மிகு ஊழியர்கள் அமெரிக்க மண்ணிலேயே கிடைப்பது கடினம் அல்லது ஒரு குறுகிய காலத்திலேயே அத்தகைய நபர்களை அவர்கள் பெற்று அவர்களுக்கான சேவைகளை பெறுவது கடினமானதாக இருக்கும் . இந்த சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் அதிக கட்டணத்திற்கு தான் ஐடி சேவைகளை பெற வேண்டியது இருக்கும் இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் என எச்டிஎப்சி செக்யூரிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் சந்திரா தெரிவிக்கிறார்.
இந்த 25 சதவீத வரியை அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன் வர வாய்ப்பு இருக்கிறது, வருவாயை இழந்து விடக்கூடாது கிளைண்டினை இழந்து விடக்கூடாது என்பதற்காக சில இந்திய நிறுவனங்கள் இந்த வரிச் சுமையை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த விஷயத்தில், ஒரு சேவைக்காக 100 டாலரை பெற்ற இந்திய நிறுவனங்கள் இனி 80 டாலர் வரை பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் திறன் மிகு வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு ஹெச்1பி விசா உ:ள்ளிட்டவற்றின் மூலம் அழைத்து வந்து வேலை வாங்குவதிலும், இந்திய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை அமெரிக்க மண்ணிற்கு அனுப்புவதிலும் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இது தவிர அமெரிக்க பொருளாதாரமும் மந்தமாக இருக்கிறது. இந்த சிக்கல்களுக்கு மத்தியில் HIRE சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு குறுகிய காலத்தில் வருவாய் தாக்கம் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் அது மறைந்துவிடும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!



Click it and Unblock the Notifications