நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு பன்னாட்டு நிதியத்துக்கும், அந்நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே முதல் தவணையாக 110 கோடி டாலரை பன்னாட்டு நிதியம் விடுவித்து விட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய பிறகும், பன்னாட்டு நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.
தீவிரவாதம்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரச ஆதரவு பெற்ற தீவிரவாதத்திற்காகவோ பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பன்னாட்டு நிதியத்தை இந்தியா எச்சரித்தது. ஆனாலும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க பன்னாட்டு நிதியம் ஒப்புதல் அளித்தது. அதேசமயம், இரண்டாவது கட்ட நிதியை விடுவிப்பதற்காக பாகிஸ்தானுக்கு புதிதாக 11 நிபந்தனைகளை பன்னாட்டு நிதியம் விதித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு பன்னாட்டு நிதியம் விதித்துள்ள மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

பன்னாட்டு நிதியத்தின் புதிய நிபந்தனைகளில், ரூ.17.6 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல், மின்சார கட்டணங்களுக்கான கடன் சேவை கூடுதல் வரி அதிகரிப்பு மற்றும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதலும் அடங்கும். அடுத்த நிதியாண்டுக்கான பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.2.14 லட்சம் கோடி என்ற அளவில்தான் இருக்க வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் குறிப்பிட்டுள்ளது.
பட்ஜெட்
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு, பாகிஸ்தான் அரசாங்கம் ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக அல்லது பட்ஜெட்டில் 18 சதவீதம் அதிகரிப்பை ஒதுக்குவதாக அறிவித்தது. பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மத்திய பட்ஜெட்டின் மொத்த அளவு ரூ.17.6 லட்சம் கோடி. இதில் வளர்ச்சி செலவினங்களுக்கான ரூ.1.07 லட்சம் கோடியும் அடங்கும்.
2025 ஜூன் இறுதிக்குள் திட்ட இலக்குகளை அடைவதற்கான பன்னாட்டு நிதிய ஊழியர் ஒப்பந்தத்திற்கு இணங்க, நிதியாண்டு 2026 பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கான புதிய நிபந்தனையை அது விதித்துள்ளது. மின் கட்டணங்களை செலவு மீட்பு மட்டங்களில் பராமரிக்க வேண்டும் என்று அந்நாட்டை பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் 2025 ஜூலை 1ம் தேதிக்குள் பாகிஸ்தான் அரசாங்கம் வருடாந்திர மின்சார கட்டண மறுஅடிப்படை அறிவிப்புகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்குலர் கடன்
அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்திற்கு மேலதிகமாக, தவறான எரிசக்தி கொள்கைகள், சர்க்குலர் கடன் அதிகரிப்புக்கு காரணமாகின்றன என்று பாகிஸ்தானிடம் பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் தெரிவித்தன. மேலும், இந்தியாவுடான பதட்டங்கள் திட்டத்தின் நிதி, வெளி மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று பாகிஸ்தானை பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications