டெல்லி: பொருளுக்கு பதிலாக பொருளை கொடுத்து வாங்கிய நடைமுறை மாறி பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் நடைமுறை தொடங்கிய நாள் முதலே பணத்திற்கு தனி மதிப்பு உருவாகிவிட்டது. அந்த பணத்திற்காக தான் நாம் ஓடி ஓடி உழைக்கிறோம்.
ரூபாய் தாளை கையில் வைத்திருப்பதே தனி உணர்வு தான். இப்படி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்ததன் பின்னணியில் பெரிய வரலாறு இருக்கிறது. அதில் முக்கியமாக 1 ரூபாய் நோட்டு இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்த வரலாறை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு செல்ல வேண்டும்.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பிரபலமான ஒரு ரூபாய் நோட்டு உட்பட, காகித நாணயத்தின் அறிமுகம் பணப்பரிவர்த்தனை முறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ரூபாய் நோட்டு பயன்பாடு என்பது நமது நிதி நிலையை ஸ்திரப்படுத்தியதோடு, நவீனமயமாக்கல் நோக்கியும் அழைத்து சென்றது.
1861 ஆம் ஆண்டு இந்திய காகித பண சட்டத்தின் மூலம் அரசு உத்தரவாதம் அளித்த முதல் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது . ஆனால் இது முதன் முதலில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஆட்சியின் போது 1917இல் 30 நவம்பர் அன்று ஒரு உறுதியளிப்பு குறிப்பாக தான் வெளியிடப்பட்டது.
இந்த முதல் ஒரு ரூபாய் நோட்டில் எம்எம்எஸ் சுயாதீன நாணய திணைக்களத்தின் பொறுப்பாளர் கையெழுத்திட்டு இருந்தார். இந்த நோட்டுகள் 25 நோட்டுகள் கொண்ட தொகுப்பு புத்தகங்களாக வெளியிடப்பட்டன. நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் இந்திய அரசு என அச்சிடப்பட்டிருந்தது.
மேல் இடது மூலையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப்படம் உள்ள ஒரு நாணய வடிவில் அச்சிடப்பட்டிருந்தது. நோட்டின் மையத்தில் ஒரு ரூபாய் என இருந்தது. மேல் வலது மற்றும் கீழ் இடது மூலைகளில் எண்கள் இடம் பெற்றிருந்தன. இந்திய அரசாங்கத்திற்காக என்ற ஒரு கையொப்பமும் இடம்பெற்றிருந்தது.
நோட்டின் பின்புறத்தில் ஒரு நாணய அச்சு மற்றும் ஒரு குறியீடு மற்றும் வரிசையாக மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தன.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெளியிட்ட முதல் ஒரு ரூபாய் நோட்டு எளிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களை கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக ரூபாய் நோட்டுகளின் வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதில் பயன்படுத்தப்படும் நிறங்கள் மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.
நாம் முற்றிலும் டிஜிட்டல் மையத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு ரூபாய் நோட்டுகள் என்பது பெரும்பாலும் தற்போது புழக்கத்திலேயே கிடையாது . இருந்தாலும் இந்தியாவில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்த ரூபாய் நோட்டு என்ற முறையில் பல்வேறு வரலாறுகளையும் பல்வேறு கலாச்சார மாற்றங்களையும் தன்னகத்தை கொண்டு இருக்கிறது இந்த ஒரு ரூபாய் நோட்டு.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications