இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மிக முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் ஒரு பிரமாண்ட கட்டிடம் தான் ஹைதராபாத் ஹவுஸ். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இங்கு வருவது உறுதியானதால், இந்தக் கட்டிடம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாளிகை வெறும் அரசு அலுவலகம் அல்ல; இது ஒரு காலத்தில் உலகிலேயே அதிகப் பணம் படைத்த ஒரு மன்னரின் கனவாக உருவானதாகும். இதன் கூரைகள், பிரம்மாண்டமான அரங்குகள் அனைத்தும் உலக அரசியலை தீர்மானிக்கும் முடிவுகளுக்கு இன்றும் சாட்சியாக நிற்கின்றன.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மாளிகை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இதன் உரிமையாளர், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மன்னரான மீர் உஸ்மான் அலி கான். அவர் எவ்வளவு செல்வந்தர் என்றால், உலகிலேயே அதிகம் பணம் வைத்திருந்தவர் அவர்தான். இந்தியாவுக்கு புதிய தலைநகராக டெல்லி மாறியபோது, ஆங்கிலேயர்கள் தனக்கு மரியாதை தரும் விதத்தில் ஓர் இடம் ஒதுக்க வேண்டும் என்று நிஜாம் விரும்பினார். அதனால், ஆங்கிலேய வைஸ்ராய் தங்கும் மாளிகைக்கு (இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை) மிக அருகில் தனக்கு நிலம் வேண்டும் என்று நிஜாம் கேட்டார்.

ஆங்கிலேயர்கள் இதற்கு மறுத்துவிட்டாலும், ஹைதராபாத், பரோடா உள்ளிட்ட 5 முக்கிய மன்னர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த அரண்மனையை கட்ட அனுமதி கிடைத்தது. இந்த அரண்மனையை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்டியன்ஸ். வைஸ்ராய் மாளிகைக்கு இணையான மாளிகையை கட்ட பிரிட்டிஷார் அனுமதிக்கவில்லை என்றாலும், லூட்டியன்ஸ் ஒரு தந்திரம் செய்தார்.
அவர் வைஸ்ராய் மாளிகையின் வடிவமைப்பில் இருந்து ஒரு மைய கூரையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி முழுவதையும் ஒரு பிரம்மாண்டமான பட்டாம்பூச்சி வடிவத்தில் வடிவமைத்தார். இதன் கட்டுமான செலவு அந்தக் காலத்திலேயே லட்சக்கணக்கில் ஆனது. இது நிஜாமின் செல்வச் செழிப்பைக் காட்டினாலும், டெல்லியில் இருந்த மற்ற அரச மாளிகைகளை விட மிக உயர்வாக கம்பீரத்துடன் நின்றது.
இந்த மாளிகையில் 36 அறைகள், வளைவுகள், அழகான படிக்கட்டுகள் என அனைத்தும் ஐரோப்பிய மற்றும் முகலாய கட்டிடக்கலையின் கலவையாக அமைந்தன. நிஜாமின் வைரச் சுரங்கங்களில் கிடைத்தப் பணத்தைக் கொண்டு இது கட்டப்பட்டது. ஆனால், இவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தும் நிஜாம் இங்கு அரிதாகவே வந்து சென்றார் என்பது ஆச்சரியமான தகவல்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஹைதராபாத் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால், இந்தக் கட்டிடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1974-ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது.
இன்று வரை, ஹைதராபாத் ஹவுஸ் தான் இந்தியாவின் மிக முக்கியமான அரசு விருந்தினர் மாளிகையாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர்கள், வெளிநாட்டுப் பிரதமர்கள், மன்னர்கள் என உலகத் தலைவர்கள் அனைவரும் இங்கு வந்துதான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான முடிவுகள் எடுக்கப்படும் மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாப்பான இடமாக இந்தக் கட்டிடம் மாறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications