சமீபத்தில் ஒரு சம்பவம், நவீன இளைஞர்களின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் தொழில்முறை கனவுகள் குறித்த ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. நியூயார்க்கில் உள்ள கூகிள் நிறுவனத்தில், ஆண்டுக்கு சுமார் ரூ.2.52 கோடி (300,000 டாலர்) சம்பளத்துடன் ஒரு கனவு வேலையில் இருந்த ஜிம் டாங் என்ற 27 வயது இளைஞன், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு டிஜிட்டல் நாடோடியாக (Digital Nomad) சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர முடிவு செய்துள்ளார்.
பிசினஸ் இன்சைடர் செய்தி நிறுவனத்துடன் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு கட்டுரையில், ஜிம் டாங் தனது பயணத்தை விவரித்துள்ளார். அவர் 2021-ஆம் ஆண்டு கூகிளில் சேர்ந்தபோது, அது தனது பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் என்றும், தனது நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் நம்பினார். என் பெற்றோரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அமெரிக்க கனவை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

அதிக சம்பளம் மற்றும் பல சலுகைகள் இருந்தபோதிலும், அவரது மனதிற்குள் ஒரு வெறுமை உணர்வு தோன்றத் தொடங்கியது. பல சலுகைகள் இருந்தாலும், புத்திசாலித்தனமான நண்பர்களுடன் வேலை செய்தாலும், நான் ஒருபோதும் இந்த கார்ப்பரேட் வேலையை விரும்பியதில்லை என்று அவர் கூறினார். கூகுளின் விளம்பரங்களுக்கான தயாரிப்புகளில் நான் வேலை செய்தபோது, நிறுவனத்திற்கு நிறைய பணம் சம்பாதிக்க உதவியிருக்கலாம். ஆனால் அது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அர்த்தத்தையும் தரவில்லை என்று அவர் மனம் திறந்து பேசினார்.
சில காலம், ஜிம் டாங், FIRE (Financial Independence, Retire Early) என்ற இயக்கத்தின்படி, 5 மில்லியன் டாலர்களைச் சேமித்து, தனது 40 வயதிற்குள் ஓய்வு பெறலாம் என்ற நம்பிக்கையில் உழைத்தார். பதவி உயர்வுகளுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால், ஒரு தனிப்பட்ட உறவு முறிவு, அவரது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. அதன் பிறகு, அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாக, மே 2025-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பிறகு, ஜிம் டாங் டோக்கியோவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். ஆசியா முழுவதும் பயணம் செய்து, ஒரு படைப்பாளியாகவும், தொழில்முனைவோராகவும் வாழ்க்கையை ஆராய்ந்து வருகிறார். இப்போது அவர் டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குகிறார், தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறார், மேலும் தனது கார்ப்பரேட் வாழ்க்கையிலிருந்து வெளியேறிய பயணத்தை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்துகிறார். அவரது வருமானம் நிலையற்றதாக இருந்தாலும், கூகிளில் அவர் சேர்த்த நிதி, அவருக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது.
ஜிம் டாங் தனது வாழ்க்கையில் கண்ட மிகப்பெரிய மாற்றம், வெற்றியைப் பற்றிய அவரது வரையறையே என்று குறிப்பிட்டார். வெற்றியை நான் முன்பு அங்கீகாரம் மற்றும் பாராட்டை அடிப்படையாகக் கொண்டு பார்த்தேன். ஆனால் இப்போது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாக உணர்ந்தால், அதுவே உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
பணம், பதவி, புகழ் என அனைத்தும் இருந்தாலும், மன நிறைவு இல்லாத வாழ்க்கை என்பது ஒரு கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை என்பதை ஜிம் டாங் உணர்ந்துள்ளார். அவரது கதை, பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும், அவர்களின் வாழ்க்கைப் பாதையை மறுபரிசீலனை செய்வதற்கான தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications