இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈடுபவர்களால் கூட ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு பதிவு விவாதத்தை எழுப்பியுள்ளது.
அக்சய் ஸ்ரீவாஸ்தவா என்பவர் financial influencerஆக இருக்கிறார். முதலீடு மற்றும் இந்திய வரி நடைமுறைகள் குறித்து அவர் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு இந்தியாவில் வாழ்க்கை தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கிராமத்தில் வசிப்பவர்கள் மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் கூட ஒரு அரசனைப் போல வாழ்கிறார்கள், ஆனால் மும்பை போன்ற ஒரு நகரத்தில் நீங்கள் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட ஏழ்மையான வாழ்க்கை தான் வாழ வேண்டி இருக்கும் என பதிவு செய்துள்ளார்.
டெல்லி, மும்பை , பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கைச் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது சார்ஜா உள்ளிட்ட நகரங்களில் வாழ்க்கை செலவினம் குறைவாக இருக்கிறது என்றும் அங்கே உங்களுக்கு வரி இல்லாத வருமான வாய்ப்பு கிடைக்கிறது என்றும் கூறுகிறார். மேலும் இந்தியாவில் குவாலியர் நகரை விட பாங்காக்கில் சொந்தமாக வீடு வாங்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.
மேலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நீங்கள் வீடு வாங்க வேண்டும் என நினைத்தால், அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ நகரங்களுக்கு இணையாக ரியல் எஸ்டேட் விலை உயர்ந்து விட்டது, என்னுடைய சொந்த ஊரான கோரக்பூரில் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டன என கூறுகிறார்.
ஒரு பயனர் இந்தியாவில் மெட்ரோ நகரங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களாக மாறி வருகின்றன எனக் கூறுகிறார். ஒரு பயனர் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, அசுத்தமான தண்ணீர் , அதிகபட்ச வாழ்க்கை செலவினம் , நெருக்கமான குடியிருப்புகள் என மெட்ரோ நகரங்களில் வாழ்வதில் இருக்கும் சிரமங்களை பட்டியலிட்டுள்ளார்.
ஒரு பயனர் இந்தியாவில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் வசிப்பதில் சிறந்த பலனே நமக்கு ஃபிரஷ்ஷான காய்கறிகள் கிடைக்கும் எந்த ஒரு ரசாயனமும் கலக்காத பொருட்கள் நமக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications