டெல்லி: சிறிய அளவிலான முயற்சிகள் தான் பெரிய வெற்றியை தேடி தரும் என்பதற்கு உதாரணமான நபர் குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். நிர்மல் குமார் மிண்டா 2024 ஆம் ஆண்டின் ஹரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். இவர்தான் ஹரியானாவின் குருகுராம் பகுதியில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார்.
நிர்மல் குமார் தற்போது UNO MINDA LTD நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார் .கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 68% உயர்ந்துள்ளது. தற்போது இவர் 30,800 கோடி மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

UNO MINDA நிறுவனம் வாகனங்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. ஒரு சிறிய வொர்க்ஷாப்பாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 66 ,094 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த நிறுவனம் நிர்மல் குமார் அவர்களின் தந்தையால் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
டெல்லியில் ஒரு சிறிய வொர்க்ஷாப்பாக தான் இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக இவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தேவையான எலக்ட்ரிக் பாகங்களை தயாரித்தனர். பின்னர் 1977 ஆம் ஆண்டு நிர்மல் குமார் மிண்டா தந்தையுடன் சேர்ந்து தொழிலில் இறங்கினார்.
அப்போது மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்த அவர் நிறுவனத்தை வெவ்வேறு மாநிலங்களுக்கும் விரிவு படுத்தினார். தற்போது UNO MINDA LTD நிறுவனம் உலகம் முழுவதும் 73 இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
2020ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு தேவையான சென்சார்கள் மற்றும் விளக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மிண்டா குழுமத்தின் தலைவராக நிர்மல் குமார் மிண்டா செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஹரியானா ரத்னா விருது வழங்கி அம்மாநில அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
இவரது சொத்து மதிப்பானது 2018 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலராக இருந்து தற்போது 2.7 மில்லியன் டாலர் என அதிகரித்துள்ளது. இவர் பல்வேறு சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் . ஆதரவற்ற குழந்தைகளை தேர்வு செய்து அவர்களது கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளிட்ட நற்பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications