சென்னை: ஜனவரி மாதத்திற்குள் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்கின்றன. இதன்படி இந்த இரண்டு மாநகராட்சிகளும் கூடுதலாக 37 கிராம பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தாம்பரம் மாநகராட்சி பொருத்தவரை கூடுதலாக 18 கிராம பஞ்சாயத்துகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் சேர்க்க இருக்கிறது. அகரம் தென், மேடவாக்கம், கோவிளம்பாக்கம், கவுல் பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம் , பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு மற்றும் சித்தாலப்பாக்கம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் இணைகின்றன.

தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு தான் மாநகராட்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது தாம்பரம் மாநகராட்சியில் கூடுதலான கிராம பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இதன் பரப்பளவு 84.7 சதுர கிலோமீட்டர் இருந்து 172.34 சதுர கிலோமீட்டர் என விரிவடைகிறது. இது சென்னை மாநகராட்சியின் அளவில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
அதேபோல தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்கள் தொகை எண்ணிக்கை 7.23 லட்சத்திலிருந்து 10 .08 லட்சமாக உயர்கிறது.
2019 உள்ளாட்சி தேர்தல் காரணமாக பல்வேறு பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியில் சேர்க்க முடியாமல் போனது.
தற்போது அவற்றை சேர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயரான காமராஜ் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகளும் , வானகரம், அயப்பாக்கம், நெமிலிச்சேரி, அடையாளம்பட்டு, நடுக்குத்தாகை, காட்டுப்பாக்கம் ,சென்னீர்குப்பம், வரதராஜபுரம் ,நசரத்பேட்டை, அகரம் மேல், பண வீட்டுத் தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சூரஞ்சேரி, மோரை ,வெள்ளனூர் ,பாலவீடு மற்றும் மேப்பூர் ஆகிய 19 கிராம பஞ்சாயத்துகளையும் சேர்த்துக் கொள்கிறது.
இதன் மூலம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பரப்பளவு 65 சதுர கிலோமீட்டர் இருந்து 188 சதுர கிலோமீட்டர் என அதிகரிக்கிறது. ஆவடி மாநகராட்சியின் கீழ் வரும் மக்களின் எண்ணிக்கையும் 3.45 லட்சத்திலிருந்து 6.95 லட்சம் என உயர்கிறது. தற்போது மாநகராட்சிகளுக்குள் சேர்க்கப்பட்டிருக்கக் கூடிய கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்களின் பொறுப்பு 2024 ஆம் ஆண்டு இறுதி வரை இருக்கிறது.
எனவே அவர்களது பதவிக்காலம் முடிந்த பிறகு இவை முறைப்படி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளோடு இணைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜனவரி மாதம் முதல் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளின் எல்லை விரிவது உறுதியாகியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications