தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களுக்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெறக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் சமமான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.

தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த சூழலில் தான் இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. கடந்த மூன்றாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிவித்தார் ஆறாம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்து 2003 ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஜனவரி 1ஆம் தேதி தேசிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் , ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு முத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருந்தது. இந்த குழு டிசம்பர் மாதம் தன்னுடைய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இதனை கவனமாக ஆய்வு செய்த தமிழக அரசு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் 2026 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவித்திருக்கிறது. இதன்படி அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தில் 50% மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்காக அரசு ஊழியர்கள் தங்களுடைய மாத சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசே ஏற்கும்.
ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தவிர அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படும். இந்த மாதம் 1ஆம் தேதி முதல் தமிழக அரசு பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களுக்கும் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கட்டாயமாகும். ஜனவரி 1ஆம் தேதி அல்லது பின் ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள். கடந்த 1ஆம் தேதிக்கு முன் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

நம்ம கடலூர் சில்வர் கடற்கரையா இது? அடையாளமே தெரியாம மாறி போச்சே!! மக்கள் இனிமே படையெடுக்க போறாங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications