கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு சர்வதேச வர்த்தகச் சந்தையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஒருபக்கம் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது, மறுபக்கம் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு எவ்விதமான குறைப்பு இல்லாமல் வர்த்தகப் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம் கடல் வழி போக்குவரத்து பல நாடுகளில் முடங்கியுள்ளது, இதனால் கச்சா எண்ணெய் விநியோகமும் பாதித்துள்ளது.
இந்த மோசமான வர்த்தகச் சூழ்நிலையை மேலும் மோசமாக்க புதிய பிரச்சனை ஒன்று உருவாகியுள்ள
இந்தியா
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதிக லாபத்திற்காகப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நிறுவனங்களும், சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கிக் குவித்து உள்ளது.
புதிய பிரச்சனை
ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல்-இன் தேவை அதிகளவில் குறைந்து, வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகாமல் கச்சா எண்ணெய் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கூடுதலாகக் கச்சா எண்ணெய் வாங்கிச் சேமித்து வைக்க இடம் கூட இல்லாத நிலை உலக நாடுகள் ஏற்பட உள்ளது.
இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையில்லை.
கூடுதலான கச்சா எண்ணெய்
IHS மார்கிட் அமைப்பின் ஆய்வுகளின் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை மற்றும் விநியோகத்திற்குமான வித்தியாசம் 2020 முதல் 6 மாத காலத்தில் 1.8 பில்லியன் பேரலாக இருக்கும் என அறிவித்துள்ளது.
முதல் 3 மாத காலத்திலேயே இதன் அளவு 1.6 பில்லியன் பேரல் அலவை எட்டிவிட்ட நிலையில், அடுத்த 3 மாதத்தில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கக் கூட இடம் இல்லாத நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
ஓரே வழி
தற்போது இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைக்கப்படவில்லை எனில் உலகில் கச்சா எண்ணெய் வர்த்தகம் 90 சதவீதம் வரையில் முடங்கும் நிலை ஏற்படும்.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஓரே வழி. கொரோனா பிரச்சனை தீர்த்து வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் என IHS மார்கிட் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
வியாழக்கிழமை பாகிஸ்தான் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இடமில்லாத காரணத்தாலும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகளவில் குறைந்துவிட்டதாலும், இதன் இறக்குமதிக்கு முழுமையான தடை வித்துள்ளது.
ஏற்கனவே பல டேக்கர் கப்பல்கள் கச்சா எண்ணெய் இருப்புடன் கடலில் தத்தளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications