மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் டாடா குழும தலைவருமாக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக கடந்த வாரம் காலமானார். அவரது மறைவு இந்திய தொழில்துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் ரத்தன் டாடாவின் நினைவுகளை பகிர்ந்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன் தன்னுடைய லிங்க்டின் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தன் டாடா எப்பொழுதுமே தன்னுடைய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமாக இருப்பதை உறுதி செய்தவர் என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவை சந்தித்த எவரும் அவருடைய மனிதாபிமானம், அரவணைப்பு இந்தியாவைப் பற்றிய அவருடைய கனவு ஆகியவற்றைப் பற்றிய கதை இல்லாமல் இருக்க மாட்டார்கள் அவரைப் போல் யாருமே இங்கு இல்லை என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தனக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையிலான உறவு ஆண்டு கணக்கில் வளர்ந்தது என குறிப்பிட்டுள்ள அவர், முதலில் தொழில் சார்ந்ததாக தொடங்கி, பின்னரது தனிப்பட்ட உறவாக மாறியது எனக் கூறியுள்ளார். கார்களில் தொடங்கி ஹோட்டல்கள் வரை நாங்கள் ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். அந்தப் பேச்சு தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியதாக மாறும் போது அவர் எவ்வளவு விஷயங்களை உன்னிப்பாக கவனித்து இருக்கிறார் என்பது தெரியவரும் எனக் கூறியுள்ளார்.
தான் டாடா சன்ஸ் தலைவராக பதவியேற்ற போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சம்பள உயர்வு கோரி நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ரத்தன் டாடாவும் நானும் யூனியன் தலைவர்களை சந்தித்தோம். அந்த சந்திப்பில் ரத்தன் டாடா இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிப்பு கூறினார். மேலும் நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா பிரச்சனையை மட்டும் தீர்க்க முற்படாமல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் அக்கறை காட்டியவர் என புகழ்ந்துள்ளார். டாடா குழுமத்திற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களையும் அவர் ஒரே மாதிரியாகத்தான் பார்த்தார் அதுதான் டாடா நிறுவனத்தில் தற்போது இருக்கும் தலைவர்களையும் செதுக்கியுள்ளது என சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் அக்கறையையும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரத்தன் டாடாவின் நினைவுத்திறன் மிக அபாரமானது என குறிப்பிட்டுள்ளார் சந்திரசேகரன். அதாவது ஒரு இடத்திற்கு சென்றால் அங்கே இருந்த ஒரு சின்ன நாற்காலி தொடங்கி அனைத்து விஷயங்களையும் அவர் நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரு புத்தகம் இருந்தால் கூட அதில் என்ன கவர் படம் இருந்தது ,அதில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெளிவந்த ஆண்டு என அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாராம். ரத்தன் டாடா பற்றி கூறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் இப்போது அவருடைய இல்லாமையில் அவர் எப்படி அனைத்தையும் தெளிவாக பார்த்து தெளிவாக புரிந்து கொண்டாரோ அப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் பதிவு செய்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications