கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா முறையின்படி யுபிஐ பண பரிமாற்றம் அதிகம் நடைபெறுகிறது என்பதும் ஏராளமான மக்கள் யுபிஐ முறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் ஒருசில கிரெடிட் கார்டுகளும் அனுமதிக்கப்பட்டன என்பதும் இதனால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மூன்று வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகள் மூலமும் யுபிஐ முறையில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ரூபே கிரெடிட் கார்டை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்று கூறப்படும் யுபிஐ நெட்வொர்க்கில் இணைப்பதை நேற்று உறுதி செய்தார். இதனால் ரூபே கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
3 வங்கிகள்
யுபிஐ கட்டண தளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா
பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ நெட்வொர்க்கில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த பயனடைவார்கள் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா ( NPCI) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வணிகர்கள் க்யூஆர் குறியீடுகள் போன்ற முறையையும் பயன்படுத்தி கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் புரட்சி
யுபிஐ, யுபிஐ லைட் மற்றும் பாரத் பில்பே கிராஸ்-பார்டர் பில் பேமென்ட்ஸ் ஆகியவற்றில் ரூபே கிரெடிட் கார்டு அனுமதிக்கப்பட்டுள்ளதால், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் முறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல புதிய பயனர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் ஈடுபட இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும், இதன் மூலம் உலகம் முழுவதும் 300 மில்லியன் பயனர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications