இந்திய வங்கிகளில் வாராக் கடன் மற்றும் நிர்வாக முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியில் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த கண்காணிப்பில் சிக்கிய ஒரு வங்கி அடுத்த சில மணிநேரத்தில் மூடப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் மற்றும் ஆர்பிஐ அதன் வாடிக்கையாளர்களை விரைவில் பணத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர்.
எந்த வங்கி தெரியுமா..?
ரூபாய் கூட்டுறவு வங்கி
புனே நகரத்தை சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி செப்டம்பர் 22, 2022 முதல் ரூபாய் கூட்டுறவு வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டு உள்ளது ஆர்பிஐ.
ஆர்பிஐ
ஆர்பிஐ இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில் ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு "போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்" இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இணைப்பு
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதியைப் பெற்ற பிறகு ரூபே கூட்டுறவு வங்கி 64,000 பேருக்கு மேல் தங்களது டெபாசிட் தொகையை மொத்தம் ₹700 கோடியை திருப்பிச் செலுத்திய பின், சரஸ்வத் வங்கி இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தோல்விக்கான காரணம்
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைப்பின் தோல்விக்கு முக்கியக் காரணம் 700 கோடி ரூபாய் வைப்பு நிதி வெளியேறிய நிலையில் வர்த்தக லாபங்கள் குறைந்த காரணத்தால் மறுப்புத் தெரிவித்ததுள்ளது சரஸ்வத் வங்கி.
5 லட்சம் ரூபாய்
மேலும் ரூபாய் கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டதும், தற்போதுள்ள டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை பெற முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications