இந்திய வங்கிகளில் வாராக் கடன் மற்றும் நிர்வாக முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியில் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த கண்காணிப்பில் சிக்கிய ஒரு வங்கி அடுத்த சில மணிநேரத்தில் மூடப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் மற்றும் ஆர்பிஐ அதன் வாடிக்கையாளர்களை விரைவில் பணத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர்.
எந்த வங்கி தெரியுமா..?
ரூபாய் கூட்டுறவு வங்கி
புனே நகரத்தை சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி செப்டம்பர் 22, 2022 முதல் ரூபாய் கூட்டுறவு வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டு உள்ளது ஆர்பிஐ.
ஆர்பிஐ
ஆர்பிஐ இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில் ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு "போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்" இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இணைப்பு
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதியைப் பெற்ற பிறகு ரூபே கூட்டுறவு வங்கி 64,000 பேருக்கு மேல் தங்களது டெபாசிட் தொகையை மொத்தம் ₹700 கோடியை திருப்பிச் செலுத்திய பின், சரஸ்வத் வங்கி இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தோல்விக்கான காரணம்
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைப்பின் தோல்விக்கு முக்கியக் காரணம் 700 கோடி ரூபாய் வைப்பு நிதி வெளியேறிய நிலையில் வர்த்தக லாபங்கள் குறைந்த காரணத்தால் மறுப்புத் தெரிவித்ததுள்ளது சரஸ்வத் வங்கி.
5 லட்சம் ரூபாய்
மேலும் ரூபாய் கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டதும், தற்போதுள்ள டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை பெற முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications