உலகிலேயே அதிக ஊதியம் பெறும் CEO இவரா? ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாய் சம்பளம்! அடேங்கப்பா!

ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களின் பொறுப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அவ்வளவுக்கு அதிகமான ஊதியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தலைமை செயல் அதிகாரி 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாய் ஊதியமாக பெற்று உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற தலைமை செயலதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார் .

ஜெகதீப் சிங் குறித்து தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் மின்சார வாகன பிரிவில் பிரபலமானவர். குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் , அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் உலக அளவில் அதிக ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். இவர் 2024 பிப்ரவரி 16ஆம் தேதி குவாண்டம் ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார்.

 உலகிலேயே அதிக ஊதியம் பெறும் CEO இவரா? ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாய் சம்பளம்! அடேங்கப்பா!

அதற்கு முந்தைய ஆண்டில் இவர் ஆண்டு ஊதியமாக 17,500 கோடி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாயை அவர் ஊதியமாகப் பெற்று இருக்கிறாராம். அந்த வகையில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்ற தலைமை செயல் அதிகாரி இவர் தான். ஜெகதீப் சிங்கை பொருத்தவரை மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்தில் நிபுணராக இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியை இவரது நிறுவனம் தயாரிக்கிறது. குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏறி நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் வகையிலான இந்த பேட்டரிக்கு உலகளவில் டிமாண்ட் அதிகம். இந்த நிறுவனத்தில் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகின் பெரிய தலைகள் எல்லாம் முதலீடு செய்துள்ளன.

இவர் தற்போது நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பை சிவ சிவராமிடம் ஒப்படைத்துவிட்டார். கூடிய விரைவில் இவர் புதிய நிறுவனத்தை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. இவர் அமெரிக்காவின் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழகத்தில் பிடெக் படிப்பையும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் படித்து முடித்து இருக்கிறார். இவருக்கு 2024 ஆம் ஆண்டு கிடைத்த ஊதியத்தில் நிறுவனத்தின் பங்குகள் மூலம் மட்டும் 2.3 பில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறதாம். பொதுவாக தலைமை செயல் அதிகாரிகளுக்கு ஊதியம் என்பது பல்வேறு கொடுப்பனவுகள் கொண்ட தொகுப்பாக இருக்கும். நிறுவன பங்குகள், போனஸ் ஊதியம் என்பன உள்ளிட்டவை அடங்கும்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+