சென்னை: காற்று மாசு பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் காற்று மாசு அளவு அபாயகட்டத்தை தாண்டி இருக்கிறது. எனவே அரசு காற்று மாசுக்கு அதிகளவில் வித்திடும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை தடுக்க புது யுக்தியை கையில் எடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு: இந்தியாவில் பிஎஸ் 2 விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அதிக புகையை வெளியிடுவதால் அவை சுற்றுச்சூழலில் அதிக மாசை ஏற்படுத்துகின்றன என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வாகன பதிவு : இந்தியாவில் நாம் சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கும் போது அதனை பதிவு செய்வது கட்டாயம், இந்த பதிவு 15 ஆண்டுகளுக்கு பின் காலாவதி ஆகிவிடும். அதன் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் வாகன பதிவை புதுப்பித்து கொள்வது கட்டாயம். இந்த சூழலில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளுக்கும் பழமையான வாகனங்களை வைத்திருப்பவர்கள் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்கு இனி கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள்: எனவே மக்கள் தாங்களாகவே பழைய வாகனங்களை கைவிட்டு புது வாகனங்களை வாங்க முன் வருவார்கள் சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்பதற்காகவே அரசு இப்படி ஒரு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20 ஆண்டுகளுக்கும் பழமையான இலகு ரக வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் 5 ,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல 20 ஆண்டுகள் பழமையான இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பதிவு புதுப்பித்தல் கட்டணம் உயர்வு: இதுவே இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் 20,000 ரூபாயாகவும் இறக்குமதி செய்யப்பட்ட நான்கு சக்கரம் அல்லது அதற்கு மேல் சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கான பதிவு கட்டணம் 80,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் 20 முதல் அமல்: முன்னதாக மத்திய அரசு சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்காக பழைய வாகனங்களின் பயன்பாட்டை தடுக்க வாகனங்களுக்கான பதிவை புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதமே ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அது தற்போது இறுதி செய்யப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது . ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து இந்த வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணம் நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications