ஆட்டோ ஓட்டுநரின் மகன் IIT போகலாம்.. ஆனா ஆட்டோக்களுக்கு..? கோவை வேலுமணி-யின் எக்ஸ் பதிவு..!

மும்பை: இந்தியாவில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஐஐடியில் படிக்கச் செல்லும் போது, ஆடம்பர ஹோட்டல்கள் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய முரண் என தைரோகேர் நிறுவனர் வேலுமணி அவர்கள் எழுப்பி இருக்கும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

தைரோகேர் நிறுவனர் வேலுமணி பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தாலும் எங்கு சென்றாலும் வாடகை கார் மற்றும் ஆட்டோவில் தான் பயணம் செய்வார். அப்படி பயணம் செய்யும் போது தனக்கு கிடைக்கும் அனுபவங்களை அவர் பதவிடுவார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள வேலுமணி மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது தான் ஆட்டோவில் பயணம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் மகன் IIT போகலாம்.. ஆனா ஆட்டோக்களுக்கு..? கோவை வேலுமணி-யின் எக்ஸ் பதிவு..!

அப்போது ஆட்டோ ஓட்டுனர் உடனான கலந்துரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த ஆட்டோ ஓட்டுனர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார் ஒரு நாளைக்கு 12-ல் இருந்து 14 மணி நேரம் இவர் வேலை செய்வாராம். என்னுடைய மகனுக்காக தான் நான் இவ்வளவு நேரம் உழைக்கிறேன் என அவர் கூறினாராம். அதற்கு உங்களுடைய மகன் என்ன படித்து வருகிறார் என கேட்ட போது ஐஐடி ஐதராபாத்தில் மூன்றாமாண்டு படிப்பதாக கூறினாராம்.

மகனின் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆட்டோ ஓட்டுகிறேன் என கூறினாராம். இந்த பதிவில் நான் இவருடனான கலந்துரையாடலில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ள வேலுமணி ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு செல்லதான் ஆட்டோவில் சென்றேன்.

ஆனால் ஆட்டோவை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர். எனவே நான் கேட்டிலேயே இறங்கி நடந்து தான் சென்றேன். இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனரின் மகன் படிப்பால் ஐஐடி கல்வி வளாகம் வரை செல்ல முடிகிறது . ஆனால் இன்னமும் ஆட்டோக்களை 5 நட்சத்திர ஓட்டல்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள் இது எவ்வளவு ஒரு முரண் என கூறியுள்ளார்.

வேலுமணியின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை பலரும் புகழ்ந்துள்ளனர் .அந்த ஹோட்டல் பெயரை நீங்கள் வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும் என ஒரு பயனர் கூறியுள்ளார்.

ஒரு பயனர் இதுபோன்ற கடின உழைப்பாளிகள் தான் நாட்டின் எதிர்காலமாக இருக்கின்றனர் என கூறியுள்ளார். பல்வேறு ஐந்து நட்சத்திர விடுதிகளும் இவ்வாறு ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருப்பது முரணாக இருக்கிறது எனவும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் பலரும் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் தைராய்டு உள்ளிட்ட பரிசோதனைகளை எளிமையாக்கி தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+