கொரோனா பாதிப்பின் காரணமாகக் கடந்த 7 வாரங்களாகத் தொடர்ந்து நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துப் பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு நாட்டு மக்கள் வேறு இடத்திற்குப் பயணம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில், மத்திய அரசு ரயில் போக்குவரத்து சேவையைப் பகுதி பகுதியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்தது.
Recommended Video
இதன் படி ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு சேவை நேற்று மாலை துவக்கப்பட்டது.
சொந்த ஊருக்கும், வேலை செய்யும் ஊருக்குச் செல்ல நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் மக்கள் டிக்கெட் முன்பதிவு சேவை துவங்கிய அடுத்தச் சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்களையும் வாங்கிவிட்டனர்.
1 மணிநேரம்
திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதம் ஆனது. இதனால் 8 மணிக்குத் துவங்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு வெறும் 1 மணிநேரத்தில் அதாவது 9 மணிக்கு 54,000 ரயில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுச் சுமார் 9.9 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டியது IRCTC நிறுவனம்.
மேலும் 9.15 மணிக்குள் 30,000 பயணிகளுக்கு PNR கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான மக்கள் முன்பதிவிற்காகக் காத்திருந்த காரணத்தால் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என IRCTC நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமான வழித்தடங்கள்
Howrah-New Delhi, Bhubaneswar-New Delhi, Mumbai-Delhi வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் டிக்கெட்கள் முன்பதிவு துவங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மொத்தமும் விற்பனை ஆனது. இதனால் மே 12-17 வரையில் இவ்வழித்தட ரயில் டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை ஆனது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 புதிய ரயில்கள்
செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் இருந்து திபுருகார், பெங்களூரு, பிலாஸ்பூர் ஆகிய ஊர்களுக்கு 8 ரயில்கள் இயக்குப்படுகிறது. மீதமுள்ள 7 ரயில்கள் ஹவுரா, பாட்னா, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் ஊர்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படுகிறது.
இவை அனைத்தும் ஏசி கோச் கொண்ட ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி
திங்கட்கிழமை பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை இயக்க ரயில் சேவையை முதல் படியாக அமையும் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த வாரத்தின் முதல் நாட்டில் 30 ரயில்கள் மக்கள் போக்குவரத்திற்காக இயங்க உள்ளது. இதில் 16 ரயில்கள் தினமும், 2 ரயில்கள் வாரத்தில் 3 முறையும், 8 ரயில்கள் வாரத்தில் 2 முறையும், 4 ரயில்கள் வாரத்தில் ஒரு முறையும் இயங்க உள்ளது.
ஆனால் இந்த ரயில் பயணத்தில் தொற்று அதிகமானால் நாடு மொத்தமும் இன்னும் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications