அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு சீனாவின் பையிட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலியில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக அறிவித்து டிக்டாக் பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு, இந்நிறுவனத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் டிக்டாக் சொத்துக்கள் மற்றும் ஆப்ரேஷன்ஸ்களை விற்பனை செய்ய 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு இதன் பின் 15 மற்றும் 7 நாள் என இரண்டு முறை கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுக் கடைசி நாளாக இருந்து வெள்ளிக்கிழமை நவம்பர் 4.
ஆனால் வெள்ளிக்கிழமை முடியும் வரையில் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் பிரச்சனை மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்டாக் செயலி
அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக் குழு டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பையிட்டான்ஸ்-க்கு அமெரிக்காவில் இருக்கும் தனது சொத்துக்கள் மற்றும் ஆப்ரேஷன்ஸ்களை அமெரிக்க நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க நவம்பர் 4 இரவு வரையில் காலக்கெடு விதித்திருந்த நிலையில் சீன நிறுவனமான பையிட்டான்ஸ் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.
பையிட்டான்ஸ் மீண்டும் கால நீட்டிப்பு கேட்ட நிலையில் அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பையிட்டான்ஸ்
அமெரிக்க மக்கள் தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வரும் இந்த நிலையிலும், இந்தச் சேவை 100% முடக்கப்படக் கூடாது என்பதற்காக அமெரிக்கா அரசும் பையிட்டான்ஸ் நிர்வாகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், டிக்டாக் செயலி குறித்து அமெரிக்க அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சீனா செயலியான பையிட் டான்ஸ்-ன் டிக்டாக் செயலிக்குச் சாதகமாகத் தடை செய்யக் கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், டிக்டாக் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்து
டிக்டாக் செயலி மக்களின் தனிநபர் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதை முன்வைத்துத் தான் அமெரிக்கா இந்நிறுவனத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இந்தச் செயலி சீன அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு முக்கியச் செயலி என டிரம்ப் அரசு கூறியுள்ளது.
சீன அரசுடன் தொடர்பு
டிரம்ப் அரசின் இந்தக் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பல முறை மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது செயலி எந்த வகையிலும் சீன அரசுடன் தொடர்பில் இல்லை என்றும், டிக்டாக் செயலியின் சர்வர் அனைத்தும் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கிறது எனப் பையிட்டான்ஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications