திருநெல்வேலி மக்கள் மழை வெள்ளம் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வேளையில் இப்பகுதி பொருளாதாரம், வர்த்தகம், மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும் முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் விக்ரம் சோலார் என்ற நிறுவனம் 200 ஏக்கரில் மாபெரும் சோலார் மாடியூல் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.
சுமார் 200 ஏக்கர் நிலத்தில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்தச் சோலார் செல் மற்றும் மாடியூல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தது விக்ரம் சோலார் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொழிற்சாலை மூலம் டிப்லமோ, ஐடிஐ, கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் பட்டதாரிகள் எனச் சுமாப் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

விக்ரம் சோலார் நிறுவனத்தின் இந்த 3 ஜிகாவாட் தொழிற்சாலை வேகமெடுக்காமல் இருந்த நிலையில், இலங்கையில் அதானி குழுமத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அரசு நிறுவனமான DFC எனப்படும் சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு கங்கைகொண்டான்-ல் அமைக்கப்படும் விக்ரம் சோலார் திட்டத்திற்குச் சுமார் 200 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
துபாயில் நடந்த கூட்டத்தில் கங்கைகொண்டான் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் விக்ரம் சோலார், DFC மத்தியில் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிளீன் மற்றும் நிலையான எனர்ஜியை உருவாக்குவதில் விக்ரம் சோலார் உடன் DFC கூட்டணி சேர்ந்துள்ளது என விக்ரம் சோலார்-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான கியானேஷ் சௌத்ரி இந்நிறுவன அறிக்கையில் தெரிவித்தார்.
திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கங்கைகொண்டான் சிப்காட் மிகவும் முக்கியமானது, சுமார் 2000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தத் தொழிற்பேட்டையில் கடந்த 2 வருடத்தில் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை திரட்டப்பட்டு உள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தற்போது சோலார் மாடியூல், பிஸ்கட், ஹைய் டெக் சென்சார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துள்ளது. இதில் டாடா பவர் சோலார், விக்ரம் சோலார், பிரிட்டானியா, BOSCH ஆகியவை வந்துள்ளது.
டாடா பவர் சோலார், விக்ரம் சோலார் ஆகியவை தலா 200 ஏக்கரில் சோலார் செல் மற்றும் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. ஜெர்மனி நாட்டின் BOSCH 550 கோடி ரூபாய் முதலீட்டில் 80 ஏக்கரில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் 1500 ஏக்கர் கூடுதலாக ஈர்க்கும் திட்டத்தில் கடந்த சில காலாண்டுகளாகப் பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications