திருப்பதி லட்டுக்களில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு நான்கு பேரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்படுகிறார்கள். இந்திய மக்கள் அதிகளவில் செல்லும் கோயில்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த விஷயம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், ஆந்திர மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் திண்டுக்கல்-ஐ சேர்ந்த அ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். ராஜசேகரன் முக்கிய நபராக உள்ளார். இவருடன் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போல் பாபா டெய்ரி நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லூர் வைஷ்ணவி டெய்ரியைச் சேர்ந்த அபூர்வா சவுடாவும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்களாக இந்த நான்கு பேரிடமும் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கைது செய்துள்ளனர். பின்னர், திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிபிஐ விசாரணையில், லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் பல்வேறு நிலைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது திருப்பதி லட்டுக்களில் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். தெலுங்கு தேசம் கட்சி (TDP) பின்னர் ஆய்வக அறிக்கையை வெளியிட்டு, இந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என மறுத்துவிட்டது. இதேவேளையில் ஆந்திர அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து மாநில அரசு தனது விசாரணையை தொடங்கிய நிலையில், இது உச்ச நீதிமன்றத்தை எட்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவில் ஐதராபாத் சிபிஐ கூடுதல் இயக்குநர், விசாகப்பட்டினம் சிபிஐ காவல் கண்காணிப்பாளர், குண்டூர் ஐஜி, விசாகப்பட்டினம் ரேஞ்ச் டிஐஜி, மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications