எல்லோருக்கும் தீபாவளி முடிந்தது, ஆனால் திருப்பூர்-க்கு மட்டும் இப்போது தான் தீபாவளி துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி 3 மாதம் தான் திருப்பூர்-க்கான முக்கிய வர்த்தகக் காலம், காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக அதிகப்படியான ஆடை ஏற்றுமதி திருப்பூரில் இருந்து நடக்கும்.
இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 55% பங்கீட்டைத் தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கொண்டு உள்ளனர். இதனால் வருடத்தில் இந்த 3 மாத காலம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வேளையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பணவீக்கம் திருப்பூரை மறைமுகமாகப் பாதித்துள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கான டிமாண்ட் பணவீக்கம் அதிகமாக இருந்த போதிலும் ஏற்றுமதி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் காரணமாகக் குறைந்த விலை கொண்ட ஆடைகள் மட்டுமே அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொதுவாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலகட்டத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து திருப்பூரில் இருந்து 8 முதல் 10 டாலர் மதிப்பிலான பேஷன் ஆடைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை வாங்குவது தான் வழக்கம். இதற்கு மாறாகத் தற்போது உலகளாவிய பிராண்டுகள் வெறும் 2 டாலர் விலையுள்ள எளிய டி-சர்ட்கள் போன்ற குறைந்த விலை ஆடைகளை அதிகமாக வாங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வர்த்தகர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிக விலையுள்ள பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, பொதுவாக அதிக விலை கொண்ட ஆடையில் அதிக லாபம் கிடைக்கும். விலை குறைவான பொருட்களின் மார்ஜின் அளவு எப்போதும் குறைவாகவே இருக்கும்.
இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனமான வார்சா இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராஜா சண்முகம் கூறுகையில், வெளிநாடுகளில் மொத்தமாக வாங்குவோர் இந்த ஆண்டு இன்னர்வேர், டி-சர்ட் போன்ற விலை குறைவான பொருட்களை வாங்கியுள்ளனர். அதிக விலை கொண்ட ஆடைகளை வாங்க விருப்பம் காட்டவில்லை என ஈடி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கிய காலத்தில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிகப் பணவீக்கத்துடன் போராடி வருகின்றன. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இஸ்ரேல் - ஹாமாஸ் போர், சீனாவின் உள்நாட்டு டிமாண்ட் எனப் பல காரணங்களாக உற்பத்தியும், சப்ளை செயினும் பாதிக்கப்பட்டு உள்ளது.
2008-09 சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பின்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விலை குறைவான பொருட்களை வாங்கியுள்ளனர் எனவும் வார்சா ராஜா சண்முகம் தெரிவித்தார்.
எல்லோரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டிமாண்ட் குறைவாக உள்ளதாகப் பேசுகின்றனர், ஆஸ்திரேலியாவிலும் இந்த நிலை தான். சர்வதேச வர்த்தகம் தற்போது மந்தநிலையில் இருப்பதாக அஹானா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பார்ட்னரான கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அஹானா இன்டர்நேஷனல் நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கேஎம் சுப்பிரமணியம் கூறுகையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏற்றுமதி அதிகரிக்கும் என நம்பினோம், ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் வெளிநாடுகளில் டிமாண்ட் குறைவாக இருக்கும் காரணத்தால் சுமார் 40 சதவீத வரையில் வர்த்தகம் சரிந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications