திருப்பூர் மினி டைடல் பார்க்.. வந்தது முக்கிய அப்டேட்..!!

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் அதாவது நியோ டைடல் பார்க், டிசம்பர் இறுதியில் தயாராக இருக்கும் என தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையிலும் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக துவங்க இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை நேற்று திறந்து வைத்தார்.

திருப்பூர் மினி டைடல் பார்க்.. வந்தது முக்கிய அப்டேட்..!!

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் கட்டுமான நிலை குறித்து தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது டெக்ஸ்டைல் நகரமான திருப்பூர் நகருக்கு அருகில் திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் குறித்த அப்படேட்டும் வெளியாகியுள்ளது.

எட்டு தளங்களைக் கொண்ட திருப்பூர் மின் டைடல் பார்க் கட்டிடம் மொத்த 66,139 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அலுவலக இடமாக அமைந்துள்ளது, ஒவ்வொரு தளமும் சுமார் 6,500 சதுர அடி பரப்பைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

இந்த ஐடி பார்கின் தரைதளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கேண்டீன் அமைக்கப்படும். IT நிறுவனங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே அலுவலகங்களை அமைக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, 3ஆம் நிலை நகரமான திருப்பூர்-லும் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா: தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, ரூ.30.50 கோடி செலவில் சுமார் 3.4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 55,000 சதுர அடி அலுவலக இடத்துடன் கூடிய இந்த பூங்கா, தொழில்முனைவோர் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இங்கு, ஸ்டார்ட்-அப்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

சேலம் மினி டைடல் பூங்கா: சேலம் மாவட்டம், கருப்பூரில் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த பூங்கா, சேலம் நகரின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். இந்த பூங்காவின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.

தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தது மட்டும் அல்லாமல் இந்த ஐடி பார்க்கில் அலுவலகம் அமைக்க குத்தகை ஒப்பந்தம் செய்தவர்களுக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையயும் நேற்று கொடுத்தார். இதன் படி தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்கில் Hamly Business Solutions, Inforios Software Technologies ஆகியவை அலுவலகம் அமைக்கிறது. இதேபோல் சேலம் நியோ டைடல் பார்க்கில் Namma Office, AKS Hitech Smart Solutions, Tamil Zorous, Telth Healthcare, Axis Healthcare ஆகியவை அலுவலகம் அமைக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+