இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என பெயர் பெற்றதுதான் தமிழ்நாட்டின் திருப்பூர் நகரம். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் இந்திய பொருளாதாரத்திற்கு பல லட்சம் கோடி பங்களிப்பையும் தருகிறது திருப்பூர். 24 மணி நேரமும் இங்கு இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த பின்னலாடை ஆலைகள் பலரது வாழ்க்கையில் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கின்றன.
ஆனால் ஒரு சமயத்தில் இந்த வாழ்வாதாரத்திற்கே பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனையை சரி செய்த திருப்பூர் நகரம் அதிலிருந்து இன்னும் வலிமையாக மீண்டு எழுந்து வந்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறி இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த பின்னலாடை உற்பத்திக்கான சூழல்களைக் கொண்ட நகரமாக திருப்பூர் இருக்கிறது. ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக வந்துவிடவில்லை.

திருப்பூரில் பல நூறு பின்னலாடை ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படக் கூடிய சாய கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து அந்த தண்ணீரை மாசுபடுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக சுற்றுசூழல் மாசு ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வரை பொதுநல வழக்காக சென்றது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 700 சாய ஆலைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவானது.
ஒவ்வொரு நாளும் திருப்பூர் நகரில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனையை திருப்பூர் நகரம் மிக சாமர்த்தியமான முறையில் எதிர் கொண்டது. Zero liquid discharge என்ற முறைக்கு மாறியது. ஆடைகளில் பயன்படுத்தப்படக்கூடிய சாயங்கள் ஆற்றில் கலப்பது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் பிரச்சனை. எனவே ஆலைகளில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராத முறையில் ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதுதான் ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் சிஸ்டம் என அழைக்கப்படுகிறது.

இதன்படி ஆலைகளில் இருந்து வெளியாக கூடிய கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இங்கே பல கட்டங்களாக அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. முதலில் பெரிய பெரிய துகள்கள் அகற்றப்படுகின்றன பின்னர் கரிம கழிவுகள் நீக்கப்படுகின்றன இதனை அடுத்து நீரில் இருக்கும் நிறம் மற்றும் உப்புகளை ரசாயனங்கள் கொண்டு அகற்றுகிறார்கள். இறுதியாக ஆர்ஓ பயன்படுத்தப்பட்டு இந்த தண்ணீர் 92 சதவீதம் சுத்தமான நீராக மீண்டும் ஆலைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.
அதாவது நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இந்த சாய ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியே வருவது தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திருப்பூர் நகரில் 130 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு சொட்டு தண்ணீரும் வீணாவதில்லை. எந்த கழிவுகளும் நம்முடைய நதிகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசும் ஏற்படுத்தவில்லை.
இதனால் திருப்பூர் நகரத்தின் ஏற்றுமதி 12,000 கோடி ரூபாயில் இருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. பூமிக்கும் எந்த ஒரு சுற்றுச்சூழல் தாக்கமும் இல்லை. அதே வேலையில் வேலை வாய்ப்பு கெடவில்லை, ஆலைகளும் மூடப்படவில்லை.நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உலகின் பல்வேறு ஆடை உற்பத்தி நகரங்களுக்கும் முன் உதாரணமாக திருப்பூர் மாறி இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications

