தீபாவளி சீசனில் இந்த 2 பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம்.. போனஸை இப்படி கூட முதலீடு செய்யலாம்?

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் பெரியளவில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. எனினும் நகை சார்ந்த பங்குகள் நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.

இது வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நகை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூவல்லரி பங்குகள்

ஜூவல்லரி பங்குகள்

இரு ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் இரண்டாவது காலாண்டு முடிவுகளும் சாதகமாக உள்ளன.

வலுவான தேவைக்கு மத்தியில் செப்டம்பர் காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் வலுவான செயல்பாட்டினை காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 14% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது வலுவான தேவை அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நல்ல ஏற்றத்தில் நகை பங்குகள்

நல்ல ஏற்றத்தில் நகை பங்குகள்

இதேபோல டைட்டன் நிறுவனமும் நகை பிரிவில் 18% வளர்ச்சியினை கண்டுள்ளது. டைட்டன் நிறுவனம் மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்குகளில் ஒன்றாகும். இது கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவ்வர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.

சந்தை மதிப்பு அதிகம்

சந்தை மதிப்பு அதிகம்

கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அதன் மதிப்பு கிட்டதட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. லார்ஜ் கேப் பங்கான டைட்டன் நிறுவனமும் சுமார் 30% ஏற்றம் கண்டுள்ளது, இந்த இரண்டு பங்குகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பினை காட்டிலும், கல்யாண் ஜூவல்லர்ஸ்-ன் சந்தை மதிப்பானது மிக அதிகம். ஆனால் பங்கு விலையில் டைட்டனை காட்டிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பின் தங்கியுள்ளது.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் பங்குகள்

முதலீட்டாளர்களை ஈர்க்கும் பங்குகள்

டைட்டன் நிறுவனம் முதலீட்டாளார்களை பெரிதும் கவரும் பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் இரு நிறுவனங்களுமே நல்ல வளர்ச்சியினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களுமே இந்த காலகட்டத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தீபாவளி காலகட்டத்தில் இப்பங்கின் விலை ஏற்றம் காணலாம். ஆக இது வாங்கி வைக்க நல்ல பங்குகள் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எவ்வளவு அதிகரிக்கும்?

எவ்வளவு அதிகரிக்கும்?

தரகு நிறுவனம் டைட்டன் நிறுவனத்தின் இலக்கு விலையினை 2970 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 13% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதே கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கின் இலக்கு விலையும் 125 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் தொடர்ந்து விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், இப்பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டைட்டன் நிறுவனம் நகைத் துறையில் மட்டும் அல்ல, பல்வேறு துறைகளிலும் வணிகம் செய்து வருகிறது. வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்து.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+