கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் பெரியளவில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. எனினும் நகை சார்ந்த பங்குகள் நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.
இது வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நகை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூவல்லரி பங்குகள்
இரு ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் இரண்டாவது காலாண்டு முடிவுகளும் சாதகமாக உள்ளன.
வலுவான தேவைக்கு மத்தியில் செப்டம்பர் காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் வலுவான செயல்பாட்டினை காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 14% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது வலுவான தேவை அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நல்ல ஏற்றத்தில் நகை பங்குகள்
இதேபோல டைட்டன் நிறுவனமும் நகை பிரிவில் 18% வளர்ச்சியினை கண்டுள்ளது. டைட்டன் நிறுவனம் மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்குகளில் ஒன்றாகும். இது கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவ்வர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.
சந்தை மதிப்பு அதிகம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அதன் மதிப்பு கிட்டதட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. லார்ஜ் கேப் பங்கான டைட்டன் நிறுவனமும் சுமார் 30% ஏற்றம் கண்டுள்ளது, இந்த இரண்டு பங்குகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பினை காட்டிலும், கல்யாண் ஜூவல்லர்ஸ்-ன் சந்தை மதிப்பானது மிக அதிகம். ஆனால் பங்கு விலையில் டைட்டனை காட்டிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பின் தங்கியுள்ளது.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் பங்குகள்
டைட்டன் நிறுவனம் முதலீட்டாளார்களை பெரிதும் கவரும் பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் இரு நிறுவனங்களுமே நல்ல வளர்ச்சியினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களுமே இந்த காலகட்டத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தீபாவளி காலகட்டத்தில் இப்பங்கின் விலை ஏற்றம் காணலாம். ஆக இது வாங்கி வைக்க நல்ல பங்குகள் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எவ்வளவு அதிகரிக்கும்?
தரகு நிறுவனம் டைட்டன் நிறுவனத்தின் இலக்கு விலையினை 2970 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 13% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதே கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கின் இலக்கு விலையும் 125 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் தொடர்ந்து விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், இப்பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டைட்டன் நிறுவனம் நகைத் துறையில் மட்டும் அல்ல, பல்வேறு துறைகளிலும் வணிகம் செய்து வருகிறது. வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்து.
More From GoodReturns

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!



Click it and Unblock the Notifications