தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை முதல் முறையாக திமுக அரசு தாக்கல் செய்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்த வகையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்துறை என பல முக்கிய துறைகளிலும் கவனம் செலுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் தகவல் சென்டர்கள்
இதற்கிடையில் திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மொபைல் தகவல் சென்டர்கள் (Mobile information centres) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்டர்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களுக்கு மத்தியில் தவிப்பு
இது கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில், பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். குறிப்பாக புலம் பெயர் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அந்த சமயத்தில் போக்குவரத்து வசதிகள் இன்மையால், நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தவர்கள் ஏராளம்.
அடிப்படை தேவைகள் கூட கிடைக்கவில்லை
அதுமட்டும் அல்ல, சரியான உணவின்மை, தங்குவதற்கு சரியான இருப்பிடம் இல்லாமை, சம்பளம் கிடைக்காததால் அடிப்படை வாழ்வாதரத்திற்கே கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் அரசின் உதவியுடன் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பயன்பாடு என்ன
குறிப்பாக புலம் பெயர் மக்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் போன்ற நகரங்களில், மக்கள் ரயில் நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்தது மறக்க முடியா சம்பவங்களே. ஆக அரசு அதனை மனதில் கொண்டு இத்தகைய மொபைல் செண்டர்களை அமைக்க நினைத்திருக்கலாம். எனினும் இது எதற்காக? இது எந்தளவுக்கு அவர்களுக்கு பயனளிக்கும் என்பது பயன்பாட்டுக்கு வரும் போது தான் தெரியவரும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications