சென்னை: 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
எல்லார்க்கும் எல்லாம் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பொறுத்தவரை அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னையில் அடையாறு நிதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு 1500 கோடி ரூபாயை ஏற்கனவே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் இருப்பதாகவும் அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகள் முழுமை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கே போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிதாக மேம்பாலம் கட்டப்படும் என்றார். வேளச்சேரியில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.
கிராமப்பகுதிகளில் 120 கோடி ரூபாய் மதிப்பில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி தரப்படும் என தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற திட்டம் தொடங்கப்பட்டது, அது 2025-26ஆம் நிதியாண்டிலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
உலக தமிழ் ஒலிம்பியாட் ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட தங்கம் தென்னரசு, அகரம் என்ற மொழிக்கான அருங்காட்சியகம் நிறுவப்படும் என அறிவித்தார். மதுரையில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் இந்திய மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என கூறினார்.
இது தவிர டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் ஆசிய நாடுகளில் எல்லாம் தமிழ் மொழிக்கான புத்தக காட்சி நடைபெறும் என அறிவித்தார். இதற்காக 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்கிறது என கூறினார். தமிழ் மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்க முதல்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.
ஐநா அவையில் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் தங்கம் தென்னரசு வெளியிட்டார். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
Story Written By: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications