சென்னை: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முழு லாகடவுன் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் சில தளர்வுகளுக்கு பின்பு, தற்பொது தமிழக அரசும் சில தளர்வுகளை அளித்து வருகிறது.
அது கொரோனாவால் தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை பூங்கா செயல்பாடுகளை நிறுத்திய ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 17 பெரிய தொழில்துறை பிரிவுகளுக்கு மீண்டும் பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் கிண்டி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட தொழில்துறை பிரிவுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகளைத் தொடங்கும். அவ்வாறு தொடங்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு, பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதன் படி, நிறுவனங்கள் தற்போது 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற நடவடிக்கைகளில் தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கண்கானித்தல் மற்றும் பேஸ் மாஸ்க் கட்டாயமாக்குவது, இரண்டு முறை கிருமி நீக்கம் செய்தல் என பல விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளது. அதோடு சரியான சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழில்துறை பூங்காக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதோடு அறிகுறி உள்ள தொழிலாளர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டம் உள்ளிட்ட பல அதிரடியான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, மத்திய அரசு லாக்டவுனை அறிவிக்கும் ஒரு நாள் முன்பே, இங்கு தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்து இருந்தாலும், பலி எண்ணிக்கையும் 103 தொட்டுள்ளது. இதில் தமிழகத்தின் தலை நகரான சென்னையில் மட்டும் 10,000-க்கு மேல் தாக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications