தமிழ்நாட்டில் நீர் சேமிப்பு அளவீட்டை மேம்படுத்தவும், விவசாயத்திற்கு வருடம் முழுவதும் போதுமான தண்ணீர் விநியோகம் செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல முக்கியமான திட்டங்களைத் தங்களது பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் விவசாய உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.
1,000 தடுப்பணைகள், கதவணைகள்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
நதிநீர் திட்டம்
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நிதி தண்ணீரைச் சென்னைக்குக் குழாய் வாயிலாகக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு வருகிறது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.
50 குறு நீர்ப்பாசன குளங்கள்
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 50 குறு நீர்ப்பாசன குளங்களைத் தரப்படுத்தச் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு, இதற்கான பணிகளை விரைவில் துவங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும் குளங்களைத் தூர் வாருவதற்குச் சுமார் ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணை
இதோடு தமிழ்நாட்டின் நீர் தேவை அளவீட்டைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க அளவு பழைய நிலைக்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும் கொசஸ்தலை ஆற்றில் ரூ87 கோடியில் வெள்ள நீர் வடிகால் அமைக்கவும் உள்ளதாகப் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
நீர் சேமிப்பு அதிகரிப்பு
இந்த நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் நீர் சேமிப்பு அதிகரிப்பதன் வாயிலாகத் தமிழ்நாட்டில் இருக்கும் 79,395 குக்கிராமங்களில் ஒருநபருக்கு தலா 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.
தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடு
இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தமிழ்நாட்டின் தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டு அளவீட்டைக் குறைக்க முக்கிய ஆறுகளின் மேல், கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு அமைப்புகளை அமைக்கவும், ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகப் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications